எஸ்.எஸ்.காலனி கிளை
05-04-2025 எஸ்.எஸ்.காலனி தாம்ப்ராஸ் டிரஸ்ட் மற்றும் கிளை இணைந்து உலக nக்ஷமத்திற்காக ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீ.மஹாசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ.மஹாலக்ஷ்மி நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீ.சிவக்குமார் தலைமையில் வேத விற்பன்னர்கள் ஹோமங்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தனர். சின்மயா மிஷன் ஸ்ரீ.சுவாமி சிவயோகானந்தா அவர்கள் விசுவாவசு பஞ்சாங்கத்தை வெளியிட விசுவாஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ.சங்கர சீதாராமன் பெற்றுக் கொண்டார். சுவாமிஜி அருள் ஆசியுரை வழங்கினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாங்க வெளியீடு நடைபெறுகிறது. டிரஸ்ட் சேர்மன் ஸ்ரீ.எஸ்.கணபதி நரசிம்மன், மேனேஜிங் டிரஸ்டி ஸ்ரீ.ஆர்.எஸ்.ஸ்ரீனிவாசன், அறங்காவலர்கள் ஸ்ரீ.எஸ்.ராமன், ஸ்ரீ.எஸ்.நாராயணன் ஸ்ரீ.எஸ்.சேகர், ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், ஸ்ரீ.சி.சீதாராமன், ஸ்ரீ.ஆர்.கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீ.ஆர்.குருராஜன், ஸ்ரீமதி.ஆர்.ஜெயஸ்ரீ மற்றும் கிளை நிர்வாகிகள் ஸ்ரீ.பெரியஸ்வாமி, ஸ்ரீ.ராமசந்திரன், ஸ்ரீமதி.உமாமகேஸ்வரி, ஸ்ரீ.கிஷோர்குமார், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி, ஸ்ரீ.ஒய்.சிவராமன், ஸ்ரீ.வி.குமார், ஸ்ரீ.ஜி.எஸ்.ராஜகோபால் ஸ்ரீ.எம்.ஆர்.ராஜாமணி, ஸ்ரீ.கௌரிவெங்கடசுப்ரமணியன், ஸ்ரீமதி.சுபாஷினி, ஸ்ரீமதி.ரம்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீமதி.நாகலக்ஷ்மி, ஸ்ரீமதி.இந்திரா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம்
20-04-2025 அன்று 2025-2030ம் ஆண்டிற்கான தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவராக ஸ்ரீமதி.ஆர்.ஜெயஸ்ரீ போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீ.குருராஜன் அறிவித்தார். நிகழ்ச்சியை எஸ்.எஸ்.காலனி மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். டாக்டர் டி.ராமசுப்ரமணியன் விசுவாஸ் புரமோட்டர்ஸ் ஸ்ரீ.சங்கரசீதாராமன், சிருங்கேரி மடதர்மாதிகாரி ஸ்ரீ.நடேஷ்ராஜா, பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் சேர்மன் சங்கரநாராயணன், சாண்மேக் ஸ்ரீ.சங்கரநாராயணன் அம்மா கேட்டரிங் உரிமையாளர் ஸ்ரீ.பி.எஸ்.கிருஷ்ணன் தாம்ப்ராஸ் சட்ட ஆலோசகர் ஸ்ரீ.என்.சுந்தரேசன், சமூக ஆர்வலர் ஸ்ரீ.இல.அமுதன் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஆர்.ஜெயஸ்ரீ ஸ்ரீராம் வைதீக சமாஜம் நடத்தும் அபரகிரியா தோட்டத்திற்கு வாட்டர் ஹீட்டர் மற்றும் வாட்டர் டிஸ்பென்சர் நன்கொடையாக வழங்கினார். கோடை காலத்தில் தாம்ப்ராஸ் எஸ்.எஸ்.காலனி கிளை சார்பாக நீர்மோர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார் நன்றியுரையாற்றினார்.
|