பழங்காநத்தம் கிளை
17-06-2026 அன்று கிளையின் சார்பாக சுதந்திர போராட்டத் தியாகி ஸ்ரீ.வீரவாஞ்சிநாத ஐயர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிளைத் தலைவர் ஸ்ரீமதி.அன்னபூரணி தலைமையில் அன்னாரது திருஉருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. துணைத் தலைவர் ஸ்ரீமதி.வசந்த கோகிலம், ஸ்ரீ.மஹாதேவன் ஸ்ரீமதி.சாந்தா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ.இராமச்சந்திரன், ஸ்ரீ.சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம்
10-06-2026 முதல் 14-06-2026 வரை மாவட்டம் மற்றும் அனைத்து கிளைகள் இணைந்து நாம சங்கீர்த்தனம் மற்றும் விவாஹ யாகம் நடத்தியது. முதல் நாள் மதுரை சின்மயா மிஷின் ஆச்சார்யர் ஸ்வாமி சிவயோகானந்தா தலைமை வகித்து பக்தி சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தான் ஸ்ரீநாத் தாஸ் அவர்களின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியை ஸ்ரீ.ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சிஷ்யர் ஸ்வாமி கமலானந்த தீர்த்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியை பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் செயலாளர் ஸ்ரீ.உ.வே.ராஜகோபால் ஸ்வாமி அவர்கள் தொடங்கி வைத்தார். நான்காம் நாள் நிகழ்வை தாம்ப்ராஸ் மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீ.என்.கணபதி நரசிம்மன் தொடங்கி வைத்தார். ஐந்தாம் நாள் நிகழ்வை ஸ்ரீ அம்மா கேட்டரிங் நிறுவனர். ஸ்ரீ.பி.எஸ்.ஜி.கிருஷ்ண ஐயர் தொடங்கி வைத்தார். 13-06-2026 அன்று காலை முதல் கோவிந்தபுரம் ஸ்ரீ.பாலாஜி பட்டாச்சார்யார் தலைமையில் வேதவிற்பன்னர்கள். விவாஹ யாகம், புத்ர காமேஷ்டி யாஹம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாஹம், ஸ்ரீ.தக்ஷ்ணாமூர்த்தி, ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது. காஞ்சி மஹா பெரியவர் அறிவுரைப்படி அனைவருக்கும் ஸ்ரீ பவானி அம்மன் உருவப் படம் வழங்கப்பட்டது. சிருங்கேரி சாரதா பீடத்திலிருந்து ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருள் பிரசாதம் வழங்கினர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம் தலைமையில் மாவட்ட மற்றும் கிளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர். 12-06-2026 அன்று தாம்ப்ராஸ் மதுரை மாவட்டத்தின் சார்பாக அனைத்து மகளிருக்கும் திரவியங்கள் மற்றும் புடவை வழங்கப்பட்டது.
|