எஸ்.எஸ்.காலனி கிளை
25-07-2025 லோக nக்ஷமத்திற்காக கிளையின் சார்பாக குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. ஆன்மீகச் செயலாளர் பிரம்மஸ்ரீ.ஏ.சிவகுமார் ஷர்மா தலைமையில் ஸ்ரீமதி.பத்மலக்ஷ்மி சீதாராமன், ஸ்ரீமதி.அம்பா நடனகோபால், ஸ்ரீமதி.நாகலக்ஷ்மி ராமஸ்வாமி, ஸ்ரீமதி.கௌரி வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சகோதரிகள் குத்துவிளக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.உமா ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், ஸ்ரீமதி.ராஜலக்ஷ்மி, ஸ்ரீமதி.வனிதா, ஸ்ரீமதி.இந்திரா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி.ரமாகுமார், ஸ்ரீமதி.கீதா சசிராமன், ஸ்ரீமதி.பானுமதி குருராஜன், ஸ்ரீமதி.ஜானகி பத்மநாபன், ஸ்ரீமதி.சுதாபவானி, ஸ்ரீமதி.வசந்தகோகிலம், ஸ்ரீமதி.உமா நடராஜன், ஸ்ரீ.ஆர்.எஸ்.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.குமார். ஸ்ரீ.சசிராமன், ஸ்ரீ.பெரியசாமி, ஸ்ரீ.குருராஜன், ஸ்ரீ.ராமச்சந்திரன், ஸ்ரீ.நடராஜன், ஸ்ரீ.ரவி, ஸ்ரீ.ராமஸ்வாமி, ஸ்ரீ.நாராயணன் மற்றும் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
மதுரை மாவட்டம்
28-06-2025 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார் வரவேற்புரையாற்றினார். மூன்றாவது முறையாக மாவட்டத்தின் சார்பாக தர்மவிவாஹம் நடத்துவது, கிளைகளை அதிகப்படுத்துவது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில ஆலோசகர் ஸ்ரீ.கணபதி நரசிம்மன், ஸ்ரீ.ராமசாமி, தீச்சுடர் ஸ்ரீ.மோகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ.சசிராமன், மாநில செயலாளர் ஸ்ரீ ஆர்.எஸ்.ஸ்ரீனிவசான், ஸ்ரீ.ஆர்.ராமச்சந்திரன், ஸ்ரீ.குருராஜன், ஸ்ரீமதி.பானுமதி, ஸ்ரீமதி.ராஜலக்ஷ்மி ஸ்ரீமதி.அன்னபூரணி, ஸ்ரீமதி.பவானி, ஸ்ரீமதி.வசந்தகோகிலம், ஸ்ரீமதி.இந்திரா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி.உமா நடராஜன், ஸ்ரீமதி. உமா ராமச்சந்திரன், ஸ்ரீ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வீரவாஞ்சிநாதன், கிளைத் தலைவர் ஸ்ரீமதி.அன்னபூரணி நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
06-07-2025 அன்று மதுரை மாவட்டம் மற்றும் கிளைகளின் சார்பாக செம்மொழி தமிழுக்கு முதல் குரல் கொடுத்த ஸ்ரீ பரிதிமாற் கலைஞர் (எ) ஸ்ரீ.சூர்யநாராயண சாஸ்திரிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழுஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே. ஸ்ரீகுமார், மாநில ஆலோசகர் ஸ்ரீ.கணபதி நரசிம்மன், மாநில செயலாளர் ஸ்ரீ.விஸ்வநாதன், ஸ்ரீ.சுந்தரேசன், ஸ்ரீமதி.வசந்தகோகிலம், ஸ்ரீமதி.பவானி, வாஞ்சிநாதன் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.அன்னபூரணி, நாகமலை புதுக்கோட்டை ஸ்ரீ.நரசிம்மன், பங்களா கிளைத் தலைவர் ஸ்ரீ.ரவி உள்ளிட்ட மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
06-07-2025 அன்று கல்யாண மாலை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார் மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உமா, மாநில செயலாளர் ஸ்ரீ.குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ.மோகன் அவர்களை கௌரவித்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர். மாலையில் நடந்த ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாம பாராயணத்தில் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், ஸ்ரீமதி.வனிதா நரசிம்மன், ஸ்ரீமதி.சுபாஷினி குமார் ஸ்ரீமதி.ரம்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீமதி.பானுமதி குருராஜன், ஸ்ரீமதி.கௌரி வெங்கடசுப்பிரமணியன், ஸ்ரீமதி.ரமா உமா குமார், ஸ்ரீமதி.உமா நடராஜன், ஸ்ரீமதி.ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர்.
08-07-2025 அன்று அக்ஷ்ய பாரதி ஸ்ரீ.பி.எஸ்.ஜி.கிருஷ்ணன் (அம்மா கேட்டரிங்) மற்றும் ஸ்ரீ.சண்முகப்பிரியன் அவர்களும் நன்கொடையாக பி.வி.சி தண்ணீர் தொட்டிய மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.நாராயணன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்திற்கு சென்று தண்ணீர் தொட்டியை நன்கொடையாக வழங்கினர். நன்கொடையாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
21-07-2025 மாவட்டத்தின் சார்பாக தினமலர் நிறுவனர் ஸ்ரீ.டி.வி.ராமசுப்பையர் அவரது 41வது நினைவு தினத்தை முன்னிட்டு தினமலர் அலுவலகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருஉருவச்சிலைக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.ஆர்.எஸ்.ஸ்ரீனிவசான், எஸ்.எஸ்.காலனி கிளை பொருளாளர் ஸ்ரீ.கே.சி.பெரியசாமி, ஸ்ரீ.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.நாராயணன், ஸ்ரீ.நரசிம்மன், ஸ்ரீமதி.வனிதா நரசிம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
|