|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒரு சில இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்பது எதனால் ?
- கே.சேஷாத்ரி, கல்பாக்கம்
"அவர் மீது முதல் கோபம் அவர் ஊழல்வாதியாக இல்லை என்பது. அவர் மீது இரண்டாவது கோபம் அவர் உறவினர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தில் அனுமதிப்பதில்லை என்பது. இது போன்ற காரணங்களால் அவர் மீது எதிர்ப்பும், காழ்ப்புணர்ச்சியும் அதிகமாகி விட்டது. மேலும் அவருடைய ஹிந்துத்துவா சித்தாந்தத்தினை காரணம் காட்டி வசை பாடி வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களோ இவர்களின் வசை பாடலை வாழ்த்துப் பாடலாக எடுத்துக் கொண்டு தமது கடமைகளை முனைப்புடன் செய்து வருகின்றார் ஓர் கர்மயோகியாக.
சில அரசியல் தலைவர்களும், ஒரு சில இயக்கங்களும் தங்களுடைய அணுகுமுறையில் இஸ்லாமியர்களை இஸ்லாமிய மதத்தினர் என்றும், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ மதத்தினர் என்றும் சொல்லுகின்ற அவர்கள் ஹிந்துக்களை மட்டும் மதச்சார்பற்றவர்கள் என்கின்ற கண்ணோட்டத்தோடு தொடர்ந்து கையாளுவது தவறில்லையா ?
- பி.முரளீதரன், கோவை
" தவறானது, முட்டாள்தனமானது, தேச விரோதமானது, மூளைச் சலவை செய்திடும் உள்நோக்கம் கொண்டது. பாரத நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் திருத்தப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மை மக்களுக்கு எந்த வித முதன்மையும் கிடையாது என்கின்ற அடிப்படையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் பாரதத்தினை ஹிந்து நாடாக அறிவித்திட வேண்டும் என்பது தான் தற்போது பெருவாரியான மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் ஸ்ரீ.ஜி.ஆர்.ஸ்வாமிநான் அவர்களை அவருடைய சாதியின் அடிப்படையில் தாக்குவதும், கொச்சைப்படுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டாமா?
- ஆர்.சந்திரசேகர், திருநெல்வேலி
" எந்த நீதியரசருடைய உத்தரவும் சட்டத்தின் அடிப்படையிலானது. அவரது தீர்ப்பு நமக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் நாம் சட்டப்பூர்வமாக மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதனை விடுத்து அவரது ஜாதியினை பார்ப்பது என்பது விஷமத்தனமானது, குறுகிய அணுகுமுறையானது மற்றும் சட்டத்திற்கும் புறம்பானது. கண்டிக்கப்பட வேண்டும், கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|