என் கேள்விக்கென்ன பதில்

இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜுன் சம்பத் அவர்கள் சமீபகாலமாக பிராமண சமூகத்திற்கு குரல் கொடுப்பதாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறாரே அவருக்கு என்ன திடீர் அக்கறை? அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்திடுமா ?

- பி.பரசுராமன், மயிலாடுதுறை


"இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜுன் சம்பத் அவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் பிராமண சமூகத்திடம் நல் எண்ணம் கொண்டவர். ஆனால் அவர் திடீரென்று பிராமண சமூகத்திற்காக நிகழ்ச்சிகள் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளதா என்பதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை சென்னை நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து மிகப்பெரும் கூட்டத்தினை கூட்டி நம் சமூகத்தினரின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டோம்.

இந்து மக்கள் கட்சி என்பது ஓர் அரசியல் கட்சி. அதனால் அர்ஜுன் சம்பத் அரசியல் விஷயங்களை அன்றாடம் கையாண்டு வருகிறார். அதற்கு அவருக்கு உரிமையும், கடமையும் உண்டு.

ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓர் சேவை நிறுவனமாக நாம் செயல்பட்டு வருகின்றோம். நாம் அன்றாட அரசியலில் ஈடுபடுவதில்லை. அதனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் இயக்கரீதியாக அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளிலுல் கலந்து கொள்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.

பல தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவர்களுக்கும் நாம் அன்றாட அரசியலில் ஈடுபடுவது பிடிக்கவில்லை. தாங்கள் இந்த கேள்வியை எழுப்பியதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.


இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தினை டாக்டர்.அம்பேத்கார் கொடுத்தார் அதில் கொடுக்கப்பட்டுள்ள அத்தனை உரிமைகளையும் அவர் தான் ஏகமனதாக உருவாக்கியவர் என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது முற்றிலும் சரியா?

- எஸ்.ஸ்ரீநிவசான், காஞ்சிபுரம்


" டாக்டர்.அம்பேத்கர் அவர்களை பிராமண சமூகம் மிகவும் மதிக்கின்றது. அவருடைய தெளிவான தேசிய சிந்தனைகளை என்றென்றும் வரவேற்கின்றது. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் உருவாகுவதற்கு அவருடைய அற்புதமான பங்களிப்பு என்பது யாராலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத ஒன்றாகும்.

அதே சமயம் இந்திய அரசியல் நிர்ணயச் சட்ட நியமன குழுவில் டாக்டர் அம்பேத்கார் அந்த குழுவின் தலைவராக இருந்தார். அவருடன் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர், கோபாலஸ்வாமி ஐயங்கார், மற்றும் பி.என்.ராவ் ஆகியோரும் இதர வல்லுநர்களுடன் அங்கம் வகித்தனர்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களே திரு.பி.என்.ராவ் (ஓர் பிராமணர்) அவர்களுடைய பங்களிப்பு என்பது துல்லியமான தெளிவான மற்றும் நுணுக்கமான பெரும் பங்களிப்பு என்று கூறியது ஆவணமாக உள்ளது. அந்த குழுவிற்கு தலைமை தாங்கிய பல்முனை திறமை கொண்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை போற்றி புகழ்வதில் நமக்கு எந்த வருத்தமோ தயக்கமோ இல்லை. ஆனால் அதே சமயம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பிராமண சமூகத்தின் பங்களிப்பும் அளப்பறிய ஒன்று என்பது வரலாற்று உண்மை ஆகும்.


ஈ.வே.ரா பற்றி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றாரே ?

- கே.கேசவன், தர்மபுரி


" சீமான் அவர்கள் வெளியிடுவது ஈ.வே.ரா அவர்கள் பேசிய மற்றும் எழுதிய விஷயங்கள் மட்டுமே. அந்த கருத்துக்களுக்கு சர்ச்சை உருவாகுமேயானால் அதற்கு ஈ.வே.ரா அவர்கள் தான் காரணமும், பொறுப்பும் ஆவார்.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS