|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
பிரதமர் மோடி அவர்கள் பொங்கல் விழா கொண்டாடுவது அரசியல் லாபத்திற்கா அல்லது அக்கறையுடனா ?
- கே.சிவகுமார், கும்பகோணம்
"நமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் பல்வேறு அகில இந்திய தலைவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்களில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டுமேதான் தமிழ்மொழி மீதும் தமிழ் கலாச்சாரம் மீதும் மற்றும் தமிழக மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டுள்ளார். ஒவ்வொரு தமிழனும் பாராட்டிட வேண்டிய நற்செயல் மோடி அவர்களுடைய இந்த தமிழ் மற்றும் தமிழர் ஈடுபாடு.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்று உண்மையிலேயே ஆட்சேபித்தது அப்பகுதிவாழ் இஸ்லாமியர்களா அல்லது இதர அரசியல்வாதிகளா ?
- ஆர்.நாராயணசுவாமி, திருவாரூர்
"உள்ளூர் இஸ்லாமியர்கள் ஆட்சேபிக்கவில்லை. மஹா கேவலமான உண்மை யாதெனில் ஹிந்து சமய அறநிலையத்துறை தான் ஆட்சேபித்தது. மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அந்த தவறான நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்தனர். கடைசியில் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை உருவாகியது. கலியுக வரதனான முருகப் பெருமான் தவறிழைத்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டிடுவார்.
மத்திய அரசில் கடந்த காங்கிரஸ் ஆட்சி மற்றும் இதர ஆட்சி காலகட்டத்தினை விட தற்போது திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் பெரிதும் கிடைத்துள்ளது எதனாலோ ?
- கே.லக்ஷ்மிகாந்தன், ஸ்ரீரங்கம்
"பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமது சீரிய முயற்சியாலும், தெளிவான, உறுதியான வெளியுறவுக் கொள்கையினை திறம்பட மிகவும் நேர்த்தியாக கடைப்பிடித்து நடத்தி வருகின்றார். வெளியுறவுத் துறையினுடைய செயல்பாடுகளும் இவ்விஷயத்தில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. வரலாறு கண்டிராத வகையில் இந்தியாவின் மதிப்பு உலக அளவில் பெரிதும் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத் தக்க விஷயமாகும்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|