|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா ?
- எஸ்.ரமாமணி, தஞ்சாவூர்
"யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீட் தேர்வினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்விஷயத்தில் முக்கியமான அம்சம் யாதெனில் தமிழக மக்கள் நீட் தேர்வினை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய அளவில் பங்கு கொள்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்களும் பயன் அடைகின்றனர்.
தமிழக பாஜகவிற்கு ஏதேனும் எதிர்காலம் உள்ளதா ?
- ஆர்.சுதர்சனம், புத்தூர்
"எதிர்காலம் இருந்திடும். ஆனால் அதனை நோக்கி பாஜகவின் டெல்லி தலைமை ஆக்கப்பூர்வமான முறையில் தமிழக மக்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் மற்றும் உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற வகையில் வியூகம் அமைத்து செயல்பட்டிட வேண்டும்.
திமுக அஇஅதிமுக ஆட்சிகள் கடைப்பிடித்த சமூக நீதிக்கும் தற்போதைய முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசின் சமூக நீதிக்கும் என்ன வேறுபாடு ?
- பி.சேகர், கும்பகோணம்
"திமுக அதிமுகவினுடைய சமூக நீதி என்பது வெற்று கோஷம். ஒரு பக்கம் வாக்கு வங்கி அரசியல். தவெகவினை பொறுத்தவரையில் அவர்கள் கடைப்பிடிப்பது “சம நீதியான சமூக நீதி” ஆகும். உதாரணமாக தற்போதைய தமிழக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்களும், 2 பிராமண அமைச்சர்களும் இடம் பெற்றிருப்பது.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|