|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவன் கூறுவது அவருடைய உண்மையான நிலைப்பாடா ?
- ஆர்.ரம்யா, திருவானைக்காவல்
"கடந்த காலத்தில் ஒரு முறை பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்த வரலாறு தமிழக அரசியலில் மறக்க முடியாத ஒன்றாகும். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களது தேர்தல் கூட்டணியினை தங்களுடைய கட்சிக்கான அனுகூலம் எது என்கின்ற ஒரே குறிக்கோளுடன் தான் செயல்படுவார்கள், அவ்வப்பொழுது மாற்றிடவும் செய்வார்கள்.
நமது நாட்டிற்கு பாராளுமன்றத்தில் ராஜ்ய சபை தேவையா. இந்த அமைப்பில் மிகப்பெரும் செலவு தானே உருவாகிறது?
- எஸ்.கார்த்திகேயன், திருப்பூர்
"சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், பல்துறை நிபுணர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி நடத்திட வேண்டும் என்பது தான் ராஜ்யசபா உருவானதன் அடிப்படை நோக்கம். இன்று அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் அனுகூலங்களுக்கு இதனை பயன்படுத்தி வருகின்றன. இவ்விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் உள்ளது தான் தனிச் சிறப்பாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நல்ல பலன்களை கொடுத்திடுமா ?
- பி.ரமேஷ், கோவை
"பலன்கள் இருந்திடும். அவை நல்லவையா என்பது எதிர்காலத்தில் தான் தெரிய வரும். ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது அனைத்து ஜாதிகளின் உண்மையான மக்கள் தொகை கணக்கு வெளிவந்திடும். இதனால் பல அரசியல் அதிர்வுகள் நிகழும் என்று சொல்லப்படுகின்றது.
|
|
|
|
|
|
|
|
|
|
 |
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
|
|