|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் போன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும் அடிக்கடி அர்த்தமற்ற வகையில் பேசி வருகிறாரே ?
- எஸ்.சீதாலக்ஷ்மி, திருச்சி
" உண்மை தான். ராகுல் காந்திக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் டிரம்ப் அவர்களுக்கு பெரும் அதிகாரம் கையில் உள்ளது. அமெரிக்கா குரங்கு கை பூமாலையாக ஆகிவிடக் கூடாது என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். டிரம்ப் அவர்கள் இந்தியாவைப் பற்றியோ அல்லது மோடி அவர்கள் பற்றியோ எவ்வளவு பேசினாலும் எதுவுமே பேசாமல் இருக்கின்ற மோடி அவர்களின் ராஜதந்திரத்தினை உலக நாடுகள் மெச்சுகின்றன.
பீஹார் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டதே ?
-ஆர்.மஞ்சுநாதன், கோவை
" எதிர்பார்த்த முடிவு தான். காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுத் திருட்டு என்று பாஜகவினை தொடர்ந்து நக்கல் செய்து வந்தனர். அது நிரூபணம் ஆகிவிட்டது. பீஹார் மக்களின் மனதினை பாஜக கூட்டணி திருடி விட்டது. காங்கிரஸ் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
மரியாதைக்குரிய ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீ.ஸ்ரீதர் வேம்பு அவர்கள் பற்றி ஓர் குறிப்பிட்ட கட்சியினர் கேவலமாக பேசி உள்ளனரே ? இது கண்டிக்கத்தக்கது இல்லையா?
- கே.சுப்ரமண்யன், மும்பை
" வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஓர் இந்தியர் அதுவும் குறிப்பாக ஓர் தமிழர் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கிராமப் பகுதியில் நிறுவனம் உருவாக்கி அற்புதமாக பல சமூதாய சேவைகளை ஆற்றி வருகின்ற அவரைப் பற்றி பேசுவதற்கு இது போன்ற நபர்களுக்கு அருகதை கிடையாது. சூரியனை பார்த்து ஏதோ குரைத்தது என்று சொல்லுவார்களே அது போல இவைகளை எல்லாம் புறம் தள்ளி லட்சியவாதியாக அவர் தமது நிறுவனத்தினையும் பெரும் சேவைகளையும் தொடர்கின்றார்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|