|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 6 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளனரே ? அதே போன்று தமிழக வெற்றி கழகம் சார்பிலும் பிராமணர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகின்றதே? நம் சங்கத்தின் ஆதரவு எந்த அடிப்படையில் அமைந்திடும் ?
- எஸ்.தீபலக்ஷ்மி, மயிலாப்பூர்
"பிராமண சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழக சட்டப்பேரவைக்கு செல்லுகின்ற வாய்ப்பு இருக்குமானால் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாராட்டி வரவேற்றிடுவோம்.
உணர்வுகள் அடிப்படையில் மட்டுமின்றி, தேர்தல் களத்தினுடைய சூழ்நிலை, வெற்றி வாய்ப்பு ஆகியவைகளையும் மனதில் கொண்டு தான் நாம் நமது நிலைப்பாட்டினை முடிவு செய்து வந்துள்ளோம். இந்த கட்சிகளின் பிராமண சமூக வேட்பாளர்களை ஆதரிப்பது என்பது விவேகமானது அல்ல என்றும் மேலும் நம்முடைய தொலைநோக்குப் பார்வைக்கும் ஏற்றதல்ல என்பது தான் நமது மாநில பொதுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.
உலகளாவிய AI மாநாடு நடந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அநாகரீகமான ஓர் போராட்டத்தினை நடத்தி உள்ளனரே ?
- கே.ரமேஷ், விருதுநகர்
"உலக நாடுகள் பங்கு பெறும் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் இவ்வாறு அநாகரீகமாக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக நமது நாட்டிற்கு எதிரான உணர்வுகளை தூண்டுகின்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் செயல்பாடுகள் கவலை அளிக்கின்ற விஷயமாகும். காங்கிரஸ் கட்சி திருந்தவே திருந்திடாதோ என்கின்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து வருகின்றது.
காங்கிரஸ் பிரமுகரான திரு.மணிசங்கர் ஐயர் அவர்களின் கருத்துக்கள் வினோதமாக உள்ளனவே ?
- பி.சீதாராமன், நாகர்கோவில்
"நிலைதடுமாற்றத்திற்கு ஆளான தலைவர்களாக பாரதீய ஜனதா கட்சியில் டாக்டர்.சுப்ரமணிய சுவாமி அவர்களும் காங்கிரஸ் கட்சியில் திரு.மணி சங்கர் ஐயர் அவர்களும் திகழ்கின்றனர். அவர்கள் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|