|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களை மாற்றி நயினார் நாகேந்திரன் அவர்களை தலைவராக நியமித்ததால் யாருக்கு இழப்பாகும் ?
- பி.என்.ஸ்வாமி, காஞ்சிபுரம்
"இழப்பு என்று நோக்கு வோமேயானால் பாஜகவுக்குத் தான் இழப்பு. இதனை சரி செய்திட அண்ணாமலை அவர்களுக்கு கௌரவமான பொறுப்பு கொடுத்து அவரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறக்கி விட வேண்டும். அப்போது தான் நிலைமை சரியாகும்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூநுகூ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது என்று உத்தரவிட்டுள்ளதே? இது எதனால் ?
- கே.சேஷன், மதுரை
"பாரத நாட்டில் பொதுவாகவே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுடைய தரம் குறைவாக இருப்பதனால் அவர்களால் மாணவர்களுக்கு கற்பித்தலை திறம்பட செய்ய முடியவில்லை என்கின்ற கருத்து நிலவுகின்றது. ஆசிரியர்களின் தரம் உயர்த்திடவும் அதே சமயம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி வருகின்ற ஆசிரியர்களை களை எடுத்திடவும் இந்த உத்தரவு பயன்பெறும். இந்த உத்தரவின் பெரும் பயனை மாணவ சமுதாயம் பெற்றிடும் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும்.
தமிழகத்தின் அரசியல்வாதிகள் பலர் மும்மொழிக் கொள்கையினை எதிர்ப்பது ஏன் ?
- ஆர்.நாகலக்ஷ்மி, பழனி
"மலிவான அரசியல் யுக்தி தான். மும்மொழிக் கொள்கையினை எதிர்ப்பவர்கள் மக்கள் விரோதிகள் என்பது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்றது. மக்களிடையே
பெரும் விழிப்புணர்வு ஏற்படும் பொழுது இந்த அரசியல்வாதிகள் ஓரம் கட்டப்படுவார்கள்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|