|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
த.வெ.க தலைவர் நடிகர் விஜய் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு மிகப்பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கூட்டங்கள் கூட்டப்படுகின்றது ? அவர் அரை மணி நேரமாவது அரசியல் கருத்துக்களை பேசலாமே? ஏன் மாட்டேன் என்கின்றார்.
- எம்.வித்யாலக்ஷ்மி, புதுச்சேரி
" அவர் உள்ளூர் அரசியல், மாநில அரசியல், தேசிய அரசியல் மற்றும் உலகளாவிய அரசியல் பாடங்களை கற்கத் துவங்கி இருப்பார் என்று எதிர்நோக்கப்படுகின்றது. அரசியலில் தலைமை ஏற்பதற்கு அரசியல் ஞானமும், பொது அறிவும், பேச்சுத் திறனும் அவசியம் தேவை. வசனங்கள் மட்டும் பேசிய ஒருவர் பார்த்து படித்து மக்களுக்கு தலைமை வழங்கிட முடியாது. அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்லுவது இது துவக்க காலமாக இருப்பதனால் அவ்வாறு செயல்படுகின்றார். வரும் காலங்களில் ஆழ்ந்த ஞானத்தை பெற்றுக் கொண்டுவிடுவார் என்று நம்புகின்றனர். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக நமக்கு தோன்றுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அவரை ஆதரிப்பதற்கான நியாயமாக காரணங்கள் எதுவும் நமக்கு புலப்படவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
CA படித்து ஆடிட்டர்களாக பிராமண சமூகத்தினர் மட்டுமே இருப்பதாக சிலர் செய்கின்ற பிரச்சாரம் உண்மையா ?
- எல்.காமகோடி, திருவாரூர்
"25 வருடங்களுக்கு முன்னால் இருந்த சூழ்நிலையில் பெரும் எண்ணிக்கையிலான ஆடிட்டர்கள் பிராமண சமூகத்தினராக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது ஒருவருக்கு எந்த ஜாதியில் ஆடிட்டர் வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு அனைத்து சமூகத்தினரும் ஆடிட்டர்களாக உள்ளனர். நடைமுறையில் பார்க்கின்ற பொழுது எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ தங்களது ஆடிட்டர் நியமனத்தில் ஜாதி மத அடிப்படைகளை மனதில் கொள்வதில்லை. ஆடிட்டர்களுடைய அனுபவம், அவர்களுடைய திறன் ஆகிய அடிப்படையில் தான் ஆடிட்டர்களை நியமிக்கின்றனர். இவ்விஷயத்தில் செய்யப்படுகின்ற பொய் பிரச்சாரம் ஆடிட்டர்களின் தொழிலையும் பாதிக்காது, பிராமண சமூகத்தினரையும் பாதிக்காது என்பது தான் நிதர்சனம்.
தேர்தல் கமிஷனின் SIR வாக்காளர் சீர்திருத்தம் பற்றி குற்றம் கண்ட மற்றும் உள்நோக்கம் கற்பித்த அரசியல் கட்சிகள் தற்போது மௌனம் சாதிப்பது எதனால் ?
- கே.சீர்காழி சாமா, மயிலாடுதுறை
" வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது தேர்தல் ஆணையம் தொன்றுதொட்டு வழக்கமாக செய்து வருகின்ற ஓர் முயற்சி. தேர்தல் ஆணையம் இந்த சீர்திருத்தப் பணிகளில் மாநில அரசின் அதிகாரிகளையே பயன்படுத்துகின்றது. இது வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படுகின்ற வழக்கமான நடைமுறை தான். தேர்தல் ஆணையம் ஓர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு உதவிடும் என்பது அர்த்தமற்றது, அடிப்படை இல்லாதது, கண்மூடித்தனமானது. இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தினால் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மற்றும் ஏற்படவில்லை. அவர்களது பெயர்கள் விட்டுப் போய் இருந்தால் அதனை சேர்ப்பதற்கும் தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு மீஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று கட்சி அரசியல் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவது மக்கள் மனதில் வெறுப்பு என்கின்ற நஞ்சினை உருவாக்கிடும். Unfortunately some Political parties are indulging in partisan politics beyond the boundaries of neutrality and fairness.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|