என் கேள்விக்கென்ன பதில்

சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பற்றி சில திராவிட அரசியல்வாதிகள் மிகவும் தாக்கிப் பேசுகின்றனரே? குறிப்பாக அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனரே? இது சரியா?

- பி.பிரியதர்சினி, திருநெல்வேலி


"முற்றிலும் சரியல்ல. சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியின் காட்டு தர்பாரில் பல கொடுமைகள் அனுபவித்து சிறைவாசம் சென்றார். சாவர்க்கர் அவர்கள் 11 ஆண்டுகள் அந்தமான் செல்லுலார் சிறையிலும், 3 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் மற்றும் 13 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலும் மொத்தம் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவரைப் போல் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தப் பட்டியலில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கொண்டாடிட வேண்டிய தமிழக இயக்கங்களும் கட்சிகளும் அவரை கொண்டாடாமல் பிரிட்டிஷ் ஆட்சியினை ஆதரித்த சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன ஈ.வே.ரா அவர்களை கொண்டாடுவது ஓர் மோசமான மற்றும் கேவலமான நிலைப்பாடாக தமிழக அரசியலில் உள்ளது. வருந்தத்தக்க இந்த அணுகுமுறையினை சம்மந்தப்பட்ட இயக்கங்கள் கைவிட்டிட வேண்டும் என்பது தான் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS