|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ரா அவர்கள் பல ஆண்டுகளாக ஏன் பிராமணர்களை மட்டும் சாடி வந்துள்ளார்?
- கே.பஞ்சாபகேசன், ஈரோடு
"காங்கிரஸ் கட்சியில் அவருக்கு சில பிராமணர்கள் இழைத்திட்ட அநீதியின் காரணமாக கோபம் கொண்டு பிராமண துவேஷத்தினை ஓர் ஆயுதமாக பயன்படுத்தத் துவங்கினார் என்று சொல்லப்படுகின்றது. பல தருணங்களில் பிராமணர்களை மட்டுமின்றி இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும், பட்டியல் இன மக்களையும் கேவலமாக எழுதியும், பேசியும் வந்துள்ளார் ஈவேரா. பிராமணர்களாகிய நம்மை பொறுத்தவரையில் நாம் தெளிவோடும், ஈடுபாட்டோடும், துணிவோடும் பிராமணீய வாழ்க்கை முறையினை தொடர்ந்திடுவோமேயானால், நம்மை எந்த சக்தியாலும் எதுவும் செய்து விட முடியாது.
சங்க காலத்தில் தமிழ் புலவர்கள் பேசிய தமிழ் மொழிக்கும் தற்போது நாம் பேசுகின்ற தமிழ் மொழிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனரே உண்மையா?
- எஸ்.குப்புஸ்வாமி, பரங்கிமலை
"உண்மை தான். சமஸ்கிருத மொழியினை வழக்கொழிந்த மொழி என்று இந்த திராவிட இயக்கத்தினர் கூறி வருகின்றனர். அவர்களுக்கு தெரியாது சங்க கால தமிழ்மொழியும் வழக்கொழிந்த மொழி தான். தமிழை தாய்மொழியாக கொண்ட நாம் எவரும் சங்ககால தமிழ் பேசுவது இல்லை என்று அறிவார்ந்த மக்களுக்கு நன்கு தெரியும்.
திமுக, பாஜக அறிக்கை போர் மற்றும் சவால்கள் பரிமாற்றத்தில் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஒரு நொடியில் வரி கொடுக்க மாட்டோம் என்று அறிவித்திட முடியும் என்று சொல்லி உள்ளாரே இது சட்டப்படி சரியா ?
- வி.நந்தகுமார், காஞ்சிபுரம்
"அவர் உணர்ச்சி வயப்பட்டு அவ்வாறு பேசி உள்ளார். அவ்வாறு செய்யவும் முடியாது. நடைமுறை சாத்தியமும் இல்லை. மீறி செய்ய முற்பட்டால் திமுகவின் ஆட்சி பறி போய்விடும். மூத்த அரசியல்வாதியான அவருக்கும் இது நன்கு தெரியும். தலைவர்கள் உதார் விடுவதனை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
|
|
|
|
|
|
|
|
|
|
 |
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
|
|