திருச்சி மாவட்டம்

23-02-2025 அன்று 2025-2030ம் ஆண்டிற்கான மாவட்டத் தலைவர் பதவியேற்பு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமனக் கூட்டம், கடவுள் வாழ்த்து, வேதகோஷம், சங்க உறுதிமொழியுடன் துவங்கியது. மாநில உபதலைவர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத், மாநில செயலாளர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ.ஆர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவராக இரண்டாவது முறையாக ஜனநாயக முறைப்படி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ.என்.நாகராஜன் அவர்களுக்கு தேர்தல் அதிகாரி ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்டத் தலைவர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் பொறுப்பேற்றனர். மாநில செயலாளர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் மாநில உபதலைவர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.பிரபாவதி ஸ்ரீனிவாசன் மாநில இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.சௌரிராஜன் மாநில மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா மாநில இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.சித்ரா ஸ்ரீபதி, அம்மாமண்டபம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.சுதர்சனம், ஸ்ரீரங்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் அண்ணாநகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.ஜெய்சங்கர், புத்தூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.கே.ரங்கநாதன், கரியமாணிக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலாஜி வேதநாராயணன், கணபதி நகர் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.வி.ஸ்ரீப்ரியா ஸ்ரீரங்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.வெங்கடேசன், ஸ்ரீ.ஸ்ரீதரன், ஸ்ரீ.ஆர்.கண்ணன் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் பல கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றியுரையாற்றினார்.

16-03-2025 அன்று மாவட்டம் மற்றும் கிளை மகளிரணி இணைந்து 4ஆம் ஆண்டு மகளிர் தின விழா கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் துவங்கியது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில உபதலைவர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.பிரபாவதி ஸ்ரீனிவாசன் வரவேற்புரையாற்றினார். திருவானைக்காவல் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா மகளிரணிச் செயலாளர்கள் ஸ்ரீமதி.ஆர்.வசந்தா, ஸ்ரீமதி.எஸ்.சித்ரா, ஸ்ரீமதி.எஸ்.லதா, ஸ்ரீமதி.டி.எஸ்.கோமதி, ஸ்ரீமதி.விஷாலிராஜா ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன், மாவட்ட செயலாளர் ஸ்ரீ.ஏ.எஸ்.நாகராஜன் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளிராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சேஷாத்ரி மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.செ.ஜெகன்னாதன், ஸ்ரீ.டி.ஆர்.குருமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.ஜெய்சங்கர், மாநில இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.சௌரிராஜன், மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.பிரபாவதி ஸ்ரீனிவாசன், சாலை ரோடு கிளைத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன், கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ரீ.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். காசிச் செட்டி பள்ளி தலைமையாசிரியை ஸ்ரீமதி.கே.ஸ்வர்ணமாலா, தொழில் முனைவோர் மகளிர் வேர்ஸ் ஆழகு சாதன நிலைய உரிமையாளர் ஸ்ரீமதி.எஸ்.காமாட்சி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.


திருச்சி மாவட்டம் - அய்யப்ப நகர் கிளை

09-03-2025 அன்று கிளையின் சார்பாக சமஷ்டி உபநயனம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் வடுக்களை ஆசிர்வதித்து தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர்.


திருச்சி மாவட்டம் - அம்மா மண்டபம் கிளை

23-02-2025 அன்று கிளையின் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் கிளைத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ.ஆர்.சுதர்ஸனம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர்களை நியமித்து அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ.ஆர்.கண்ணன் மாநில பொதுச் செயலாளர், ஸ்ரீ.பி.ஸ்ரீனிவாசன் பொருளாளர் ஸ்ரீமதி.கோமதி மகளிரணிச் செயலாளர் ஸ்ரீ.அஜித் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.சேஷாத்ரி, ஸ்ரீ.ரவிசுந்தரேசன், உபதலைவர் ஸ்ரீ.மணிகண்டன் அமைப்பு செயலாளர் ஸ்ரீ.ரவி(கிருஷ்ணன்), ஸ்ரீ.டி.கே.ராமச்சந்திரன் ஆலோசகர்கள் ஸ்ரீ.சங்கர் சாஸ்திரிகள் ஸ்ரீ.நாகசுப்ரமணியன், ஸ்ரீமதி.பானுமதி, ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.நீலகண்ட ஷர்மா, ஸ்ரீ.குருநாதன், ஸ்ரீமதி.நளினிரங்கநாதன் ஸ்ரீ.ராமநாதன் ஆகியோர்களை செயற்குழு உறுப்பினர்களாக நியமித்தார். உறுப்பினர்கள் சேர்ப்பது, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது கிளையின் சார்பாக அதிக நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி கிளைத் தலைவர் உரையாற்றினார். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


திருச்சி மாவட்டம் - அய்யப்ப நகர் கிளை

08-03-2025/09-03-2025 அன்று கிளையின் சார்பாக 24ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் 9 வடுக்களுக்கு ஸ்ரீ.சத்யநாராயணன் சாஸ்திரிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் நடத்தி வைத்தனர். 08-03-2025 அன்று பூர்வாங்கம் நடைபெற்றது. 09-03-2025 அன்று ..... உதகசாந்தி குமாரபோஜனம், ப்ரம்மோபதேஷம் நடைபெற்றது. 9 வடுக்களுக்கும் உபநயனத்திற்கு தேவையான சீர் பொருட்கள் தாம்ப்ராஸ் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது. பின்னர் கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் கிளை செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

02-03-2025 அன்று மஹா பெரியவா ஜெயந்தி கிளையின் சார்பாக கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன், உறுப்பினர் ஸ்ரீ.வி.முத்துகிருஷ்ணன் பூஜைகளை நடத்தி வைத்தனர். நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ராத்தனை செய்தனர்.

16-03-2025 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் கடவுள் வாழ்த்து வேத கோஷம் சங்க உறுதிமொழியுடன் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.மீனாக்ஷிசுந்தரம் வரவேற்புரையாற்றினார். உரையில் சமஷ்டி உபநயனம் சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சமஷ்டி உபநயன வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. நடைபெறவுள்ள கிளை பொதுக்குழு பற்றி ஆலோசிக்கப்பட்டது. இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

20-03-2025 அன்று கிளையின் சார்பாக விசுவாவசு பஞ்சாங்க பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் உறுப்பினர் ஸ்ரீ.வி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் பொதுச் செயலாளர் மாவட்டத் தலைவர், உபதலைவர்கள், செயலாளர், அமைப்புச் செயலாளர், மகளிரணிச் செயலாளர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருச்சி மாவட்டம் - ஜெயஸ்ரீகார்டன் கிளை

31-12-2024 அன்று கலைவாணி பள்ளி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கிளையின் ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மாவதி 10ம் வகுப்பு மற்றம் சமூகவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார். கிளை உறுப்பினர்கள் ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி.லெக்ஷ்மி, ஸ்ரீமதி.ஐஸ்வர்யா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

20-01-2025 அன்று கிளையின் தலைவராக ஸ்ரீமதி.ராதாமாதவன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் அதிகாரி ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் சான்றிதழ் வழங்கினார்.

23-01-2025 திருவரங்கம் தைதேர் வைபவத்தை முன்னிட்டு தாம்ப்ராஸ் டிரஸ்ட் சார்பாக பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது.

26-01-2025 அன்று கிளையின் சார்பாக குடியரசு தின விழா தலைவர் ஸ்ரீமதி.ராதா மாதவன் தலைமையில் தேசிய கொடியேற்றி தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டது. ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.ஐஸ்வர்யா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

05-02-2025 அன்று திருவரங்கம் தேவஸ்தானத்தின் சார்பாக உண்டியல் காணிக்கை என்னும் திருதொண்டில் கிளையின் சார்பாக ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி.சுபஸ்ரீ, ஸ்ரீமதி.லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். 12-02-2025 அன்று ஸ்ரீமதி.பத்மாவதி அவர்கள் கிரஹப்ரவேஷம் மற்றும் திருமண நாளை முன்னிட்டு, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன், ஸ்ரீ.கோவிந்தன், மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி, மாநில மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.அனுராதா, ஸ்ரீமதி.ஜெயலலிதா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.ரகுநாதன் கிளையின் சார்பாக கௌரவிக்கப்பட்டார். அனைவருக்கும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.

18-02-2025 அன்று திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தடாங்க பூஜையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. கிளையின் சார்பாக ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.பிரபாவதி, ஸ்ரீமதி.ஐஸ்வர்யா, ஸ்ரீமதி.அனுராதா, ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனைசெய்தனர்.

23-02-2025 அன்று திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது மற்றும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS