திருச்சி மாவட்டம்
புத்தூர் கிளை

19-04-2026 அன்று புத்தூர் கிளையும் வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் பேராசிரியர் ஸ்ரீ.கோபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொருளாளர் ஸ்ரீ.கோவிந்தன், ஸ்ரீ.ஸ்ரீதரன், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.வேணுகோபால், ஸ்ரீ.ராமாநுஜம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம் கிளை

05-04-2026 அன்று கிளையின் சார்பாக பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா, தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் (OFT) முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் திருக்கோவில் மிராஸ் ஸ்ரீ.கோபாலகுட்டி சாஸ்த்ரிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் ப்ரதியை வெளியிட ஸ்ரீ.என்.கிருஷ்ணன் ஸ்வாமிகள் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பஞ்சாங்க படனம் வாசித்தார். மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், மாநில இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், பாஜக மாவட்ட செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரகுநாதன், அஇஅதிமுக செயலாளர் ஸ்ரீ.எஸ்.சம்பத், அம்மா மண்டபம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.சுதர்சனம், துணைத் தலைவர் ஸ்ரீ.ஜெ.சேஷாத்ரி, செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ஜெயந்திகண்ணன், இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ஆர்.சேஷாத்ரி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.பண்டாரி பத்மநாபன், ஸ்ரீ.எ.சுந்தரேசன் ஸ்ரீ.ஜெ.பிரசன்ன வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொருளாளர் ஸ்ரீ.ஆர்.லோகநாதன் நன்றி தெரிவித்தார்.


திருச்சி மாவட்டம் - பொன்மலை கிளை

14-04-2026 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் மற்றும் கடவுள் வாழ்த்து வேத கோஷத்துடன் கூட்டம் துவங்கியது. தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஸ்ரீமதி.பாலா மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பராபவ வருஷ பஞ்சாங்க படனம் நடைபெற்றது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் ஸ்ரீ.டி.குணசீலன், ஸ்ரீமதி.ராதிகா குணசீலன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.லதா வெங்கடசுப்ரமணியம், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீ.வெங்கடசுப்ரமணியம், ஸ்ரீ.ராமநாதன் ஸ்ரீமதி.ராதிகா, ஸ்ரீ.வி.வெங்கடராமன், ஸ்ரீமதி.விஜயலெக்ஷ்மி, ஸ்ரீமதி.லலிதா வெங்கடராமன், ஸ்ரீ.சிவகார்த்திகேயன், ஸ்ரீ.எ.வைகுண்டமூர்த்தி, ஸ்ரீமதி.அகிலா வைகுண்டமூர்த்தி, ஸ்ரீ.லெக்ஷ்மி நாராயணன், கோவில் ஸ்தானிகர் ஸ்ரீ.ராமமூர்த்தி, ஸ்ரீமதி.ஆனந்தி ராமமூர்த்தி, ஸ்ரீ.அனந்தராமன், ஸ்ரீமதி.சாந்தி அனந்தராமன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.வைகுண்டமூர்த்தி நன்றி கூற ஸ்வஸ்தி வாசகம், தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தார்.


திருச்சி மாவட்டம் - பொன்மலை கிளை

15-05-2026 அன்று கிளையின் கூட்டம், தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமையில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்த சஷ்டி பாராயணத்துடன் துவங்கியது. தாம்ப்ராஸ் செயல்பாடுகள், உறுப்பினர்கள் மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரர்களை அதிகரிப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. 80ரூ மேல் மதிப்பெண் பெற்ற குமாரி யாமினி விஜய் அவர்களை கிளையின் சார்பாக பாராட்டி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ரமேஷ் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லதா சங்கரசுப்ரமணியன், ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீமதி.மீனாக்ஷி ராமநாதன், ஸ்ரீ.லெக்ஷ்மி நாராயணன் ஸ்ரீ.சுந்தர்ராஜ், ஸ்ரீ.விஜய், குமாரி யாமினி, ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீமதி.லலிதா வெங்கடராமன், ஸ்ரீமதி.விஜயலெக்ஷ்மி, ஸ்ரீ.சிவகார்த்திகேயன், ஸ்ரீமதி.காயத்ரி ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.ரமேஷ் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகம், தேசியகீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS