அம்மா மண்டபம் கிளை
14-06-2026 அன்று கிளையின் சார்பாக தலைவர் ஸ்ரீ.ஆர்.சுதர்ஸனம் தலைமையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நம் சமூக மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகளை வழங்கினர். துணைத் தலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி மாணவ, மாணவிகளுக்கு சமூக ஒழுக்கம், ஆசாரம், காயத்ரி மந்திர பலன்கள் பற்றி எடுத்துரைத்தார். பொருளாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஜெயந்தன், துணைச் செயலாளர் ஸ்ரீ.அஜய் ஸ்ரீவத்ஸன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமதி.விஜயா, பொன்மலை கிளைத் தலைவர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன், மாநில ஆலோசகர் டீகுகூ ஸ்ரீ.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் பற்றி தெரிவிக்கப்பட்டது. நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
08-06-2026 அன்று கோமடம் ஸ்வாமிகளின் திருநக்ஷ்சத்திரத்தன்று நடந்த ஹிந்து ஞான உதய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஸ்வாமிகளையும் தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களையும் வரவேற்ற பின் தலைவர் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட, கிளைகளின் சார்பாக பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி மாவட்டம்
14-06-2026 அன்று நிர்வாகக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் வழிகாட்டுதல்படி துணைத் தலைவர் ஸ்ரீ.ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில ஆலோசகர் (டீகுகூ) ஸ்ரீ.சம்பத் முன்னிலை வகித்தார். புதிய கிளை துவக்குதல், கல்வி உதவித் தொகை வழங்குதல், ஆன்மீக வகுப்பு, மருத்துவ முகாம் நடத்துதல், நீர்மோர் வழங்குதல், நவராத்திரி பூஜை, வித்யா ஹோமம், தீபாவளி வஸ்த்ர தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வரும் ஆண்டில் நடத்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை, மாத இதழ் சந்தாதாரரை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன் மாவட்டச் செயலாளர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அனுராதா, ஸ்ரீ.கரியமாணிக்கம், ஸ்ரீ.பாலாஜி, ஸ்ரீ.வேதநாராயணன், பொருளாளர் ஸ்ரீ.கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
திருச்சி மாவட்டம் - ஜெய்ஸ்ரீகார்டன் கிளை
20-05-2026 அன்று ஸ்ரீமதி பத்மாவதி வாசுதேவன் இல்லத்தில் அபிராமி அந்தாதி பாராயணம் மற்றும் தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
30-06-2026 அன்று ஸ்ரீமதி.ரமாமணி முரளி இல்லத்தில் கிளையின் சார்பாக பஜனை பாடல்கள் பாடப்பட்டது. அழகர் கோவில் ஜீயர் ஸ்வாமிகள் நடத்தும் மாநாட்டில் கிளையின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு சேவை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
04-06-2026 அன்று நடைபெற்ற மாநாட்டில் கிளையின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
08-06-2026 அன்று நடைபெற்ற மாநாட்டில் தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். கிளையின் சார்பாக அவரை வரவேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
10-06-2026 அன்று ஜீயர் முகுந்தன் ஆச்சார்யன் அவர்களுக்கு கிளையின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் அவர்கள் தாம்ப்ராஸ் செயல்பாடுகளைப் பாராட்டி மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
14-06-2026 அன்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் சந்தா தொகை செலுத்துவது பற்றி உரையாற்றினார்.
திருச்சி மாவட்டம்
21-06-2026 அன்று மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் வழிகாட்டுதல்படி மாவட்ட அமைப்பின் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவிகிதம் மேல் மதிப்பெண் பெற்ற நம் சமூக மாணவ, மாணவிகளை பாராட்டி, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் விழா மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எம்.எஸ் துவக்கப்பள்ளி தாளாளர் ஸ்ரீமதி.டி.சாந்திராஜன், முனைவர் ஸ்ரீமதி.வி.சுமதி (தேசிய கல்லூரி இணைப் பேராசிரியர்) மாணவ, மாணவியரைப் பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கி அறிவுரை வழங்கினர். மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவிகளைப் பாராட்டி கைக்கடிகாரம் பரிசளித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் சிறப்பு விருந்தினர்களை பாராட்டி கவிதை எழுதியிருந்தார். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் நம் கலாச்சாரம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மாநில ஆலோசகர் ஸ்ரீ.சம்பத், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஸ்ரீ.டி.சேஷாத்ரி ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளிராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.கார்த்திகேயன், இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.வெங்கடேசன், இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.ஜெய்சங்கர், ஜெய்ஸ்ரீகார்டன் கிளை ஸ்ரீமதி.பத்மாவாசுதேவன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.அனுராதா, மாநில செயலாளர், ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ரா.மணிகண்டன், மாநில ஆலோசகர் ஸ்ரீ.சம்பத், மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருவானைக்கோவில் கிளை ஸ்ரீமதி.ஜெயலலிதா, ஜெயஸ்ரீகார்டன் கிளை ஸ்ரீமதி.கலாவதி ஆகியோர் வரவேற்பாளர்களாக இருந்து அனைவரையும் வரவேற்றனர். பொருளாளர் ஸ்ரீ.கோவிந்தன் நன்றியுரையாற்றினார்.
திருச்சி மாவட்டம் - பொன்மலை கிளை
16-06-2026 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. குருவந்தனம், விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்த சஷ்டி பாராயணம் கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழி, வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. 14-06-2026 அன்று நடைபெற்ற மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் ஸ்ரீ.கே.ரவிச்சந்திரன் அன்று நடந்த விவரங்களை தெரிவித்தார். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற குமாரி.யாமினிக்கு மாவட்டத்தின் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதற்கு கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஸ்ரீ.எல்.ராமநாதன், ஸ்ரீ.முரளிகிருஷ்ணன், ஸ்ரீ.லெக்ஷ்மி நாராயணன் இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், இணைச் செயலாளர் ஸ்ரீ.பரத்வாஜ், ஸ்ரீ.அனந்த நாராயணன், ஸ்ரீ.சிவகார்த்தி, ஸ்ரீ.சங்கர சுப்ரமணியன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி ரவிச்சந்திரன், செயலாளர் ஸ்ரீ.கே.ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ.குணசீலன் ஸ்ரீமதி.ராதிகா குணசீலன், ஸ்ரீ.வெங்கடராமன், ஸ்ரீமதி.லலிதா வெங்கடராமன், துணைத் தலைவர் ஸ்ரீ.ராமமூர்த்தி, ஸ்ரீமதி.ஆனந்தி ராமமூர்த்தி, ஸ்ரீ.சக்ரபாணி, ஸ்ரீ.சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.முரளிகிருஷ்ணன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகம் மற்றும் தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் கூட்ட ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தார்.
|