திருச்சி மாவட்டம்
- பொன்மலை கிளை

19-10-2025 அன்று சத்ஸங்கம் மற்றும் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. குருவந்தனம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றது. பின்பு கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. விருதுகள் வழங்கிய மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர், போஷகர், சந்தாதாரர் சேர்ப்பது மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்குதல் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. ஸ்தானிகர் ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.எல்.ராமநாதன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.லதா சங்கரசுப்ரமணியன், ஸ்ரீமதி.காயத்ரி, செயலாளர் ஸ்ரீ.ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ.குணசீலன், ஸ்ரீ.வெங்கடராமன், ஸ்ரீமதி.லலிதா, ஸ்ரீமதி.விஜயலெக்ஷ்மி, ஸ்ரீமதி.மீனாக்ஷி, ஸ்ரீமதி.ராதிகா, ஸ்ரீ.சுந்தரராமன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.சிவகார்த்திகேயன், ஸ்ரீ.அனந்த நாராயணன், ஸ்ரீ.பரத்வாஜ், ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். ஸ்ரீ.எல்.ராமநாதன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. 15-11-2025 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கிளையின் ஆலோசகர் பிரும்மஸ்ரீ.மஹாலிங்க சாஸ்திரிகள் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுகை ஸ்ரீ.ராமகிருஷ்ணன் தம்பதிகளுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. 16-11-2025 அன்று தாம்ப்ராஸ் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. தலைவர் சத்ய பிரமாண உறுதிமொழி வாசிக்க இளைஞர்கள், ரமேஷ், பரத்வாஜ், சிவகார்த்திகேயன், அனந்த நாராயணன் ஆகியோர் உறுதிமொழியேற்றனர். ஸ்வஸ்தி வாசகத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


திருச்சி மாவட்டம் - அம்மா மண்டபம் கிளை

20-12-2025 அன்று 46ம் ஆண்டு விழாவில் ராமானுஜர் சித்தாந்தம் பாடசாலையில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் 40 வித்யார்த்திகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் பேனா, பென்சில், புத்தகம் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. கிளைத் தலைவ்h ஸ்ரீ.சுதர்சனம் பொருளாளர் ஸ்ரீ.சீனிவாசன், ஆலோசகர் ஸ்ரீ.ரவி, ஸ்ரீரங்கம் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீபதி, செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.உமா ரமணி, பாடசாலை பொறுப்பாளர் ஸ்ரீ.சுந்தர் ஸ்வாமி, ஸ்ரீ.வெங்கடேசன் ஸ்வாமி, பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டி நடுவர்கள் மூன்று பேர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ.சுதர்சனம் செய்திருந்தார்

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS