கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் கிளை

27-07-2025 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற (591/600) ஆர்.ஹர்ஷினியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பிராமணர்களை இழிவாக பேசுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பிராமண சமூகத்திற்கு ஆதரவாக பேட்டியளித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வேத புஷ்கரணி குளத்தை சுத்தம் செய்து அனைத்து சமுதாய மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளை நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. உபதலைவர் ஸ்ரீ.வெங்கடேஷ், பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.புவனா, ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.விக்னேஷ், சட்ட ஆலோசகர் ஸ்ரீ.ராஜகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஸ்ரீ.சிவராஜன், ஸ்ரீ.ராஜகோபாலன், ஸ்ரீ.சண்முகம், ஸ்ரீ.ராஜா, ஸ்ரீ.சங்கரன், ஸ்ரீமதி.நித்யா, ஸ்ரீமதி.வத்சலா, ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.சத்யா, ஸ்ரீமதி.ஸ்ரீமதி, ஸ்ரீமதி.கண்ணம்மாள், ஸ்ரீ.ரகுராமன், ஸ்ரீ.சேகர், ஸ்ரீ.சுப்ரமணியன், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ.குரு, ஸ்ரீ.ராஜசேகர், ஸ்ரீ.நிதிஷ், ஸ்ரீ.ராம், ஸ்ரீமதி.லக்ஷிதா, ஸ்ரீமதி.ஞானசக்தி, ஸ்ரீமதி.ஹாசினி, ஸ்ரீ.அத்வைத், ஸ்ரீ.சத்யா, ஸ்ரீ.ரகுராமன், ஸ்ரீ.சிவராஜன், ஸ்ரீ.சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். கிளை பொருளாளர் ஸ்ரீ.வேங்கட கணபதி நன்றியுரையாற்றினார்.

08-08-2025 கிளையின் சார்பாக ஸ்ரீ வரலக்ஷ்மி விரத பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பூஜைக்கு தேவையான மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளைத் தலைவர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மூத்த உறுப்பினர் ஸ்ரீ.கபாலீஸ்வர ஐயர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு, பிராமணர்களை இழிவாக பேசுவதை தடுக்கவும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மங்கல பொருட்களை மூத்த உறுப்பினர் ஸ்ரீமதி.ஸ்ரீமதி வழங்கினார். ஸ்ரீ.சண்முகம், ஸ்ரீ.வேங்கடகணபதி, ஸ்ரீ.விக்னேஷ் ஸ்ரீ.குரு, ஸ்ரீ.ராஜா, ஸ்ரீ.சங்கரன், ஸ்ரீ.ரகு, ஸ்ரீ.சேகர், ஸ்ரீ.அத்வைத், ஸ்ரீ.நிதீஷ், ஸ்ரீமதி.ஹாசினி, ஸ்ரீமதி.ஹர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு லோகnக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ.சிவராமன் நன்றியுரையாற்றினார்.


கடலூர் மாவட்டம் - விருத்தாசலம் கிளை

27-06-2025 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.சேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கடவுள் வாழ்த்து வேதகோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.சேகர் வரவேற்புரையாற்றி தாம்ப்ராஸ் கிளை செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் லயன். ஸ்ரீ.ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளை பொருளாளர் ஸ்ரீ.ரங்கராஜன், ஸ்ரீ.கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். நன்றியுரை ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.


கடலூர் மாவட்டம் - மஞ்சக்குப்பம் கிளை

20-07-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.கே.திருமலை தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.பரகால இராமானுஜம் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஸ்ரீ.நரசிம்மன் 2024-2025ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார். சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் அவரது நினைவு நாளில் திருஉருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி தலைவர் எடுத்துரைத்தார். கிளையின் சார்பாக சமஷ்டி உபநயனம் நடத்துவது, ஆடி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

03-08-2025 அன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தலைவர்கள் குறித்து ஓவியம் மற்றம் பேச்சுப் போட்டி கிளைத் தலைவர் லயன் ஸ்ரீ.கே.திருமலை தலைமை தாங்கினார், கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.பரகால இராமானுஜம் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, பரிசுகளை வழங்கினார். ஆசிரியை ஸ்ரீமதி.கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ஸ்ரீ.மனோகரன் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தார். மாணவி சர்மிகாஸ்ரீ நன்றி தெரிவித்தார்.


கடலூர் மாவட்டம் - கூத்தப்பாக்கம் கிளை

உடல் நலம் குன்றியவர்கள் பூரண நலம் பெற ஸ்ரீ மிருத்யுஞ்ஜய ஜபம் ஜபிக்கப்பட்டது. 10-08-2025 அன்று கிளையின் கூட்டம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் துவங்கியது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ராஜாராமன் தலைமை தாங்கினார். கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியை ஸ்ரீ.பூ.சம்பத் வாசித்தார். செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.பாலகுரு வரவேற்புரையாற்றினார். உறுப்பினர் ஸ்ரீ.ஆர்.ஸ்ரீனிவாசன் அவரது பார்யாள் ஸ்ரீமதி. புவனேஸ்வரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் ஸ்ரீ.கணேசன் 2025-2026ம் ஆண்டிற்கான மாவட்ட, மாநில சந்தா தொகையை வழங்கினார். மாணவி எஸ்.சுபத்ராவிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.பாஸ்கரன், ஸ்ரீ.பாலகுரு, ஸ்ரீ.ஸ்ரீவத்ஸன், ஸ்ரீ.தேவராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அலமேலு, ஸ்ரீ.வத்ஸன், ஸ்ரீமதி.அலமேலு மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்வஸ்தி வாசகம் நன்றியுரை ஸ்ரீ.வெ.பிரணதார்த்திஹரன் வாசிக்க கூட்டம் நிறைவடைந்தது.


கடலூர் மாவட்டம் - விருத்தாசலம் கிளை

18-07-2025 அன்று நாம ஸங்கீர்த்தன பக்த ஜன ஸபா ஸீதா கல்யாண 15ம் ஆண்டு பாகவத மேளாவில் கிளை மகளிரணியினர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தனர் மேலும் மூன்று நாட்களும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS