கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் கிளை

13-04-2025 அன்று விசுவாவசு ஆண்டு பஞ்சாங்க படனம் ஸ்ரீ.பி.கே.டி.வாசுதேவன் சாஸ்திரிகள் பூஜைகளை நடத்தி துவங்கி வைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.சேகர் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.எ.கே.விருத்தகிரி தாம்ப்ராஸ் செயல்பாடுகள், தாம்ப்ராஸ் மாத இதழ் பற்றி எடுத்துரைத்தார். கிளைப் பொருளாளர் ஸ்ரீ.எஸ்.ரங்கராஜன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு 03-03-2025 முதல் 12-03-2025 வரை ரிக், யஜுர் வேத பாராயணம் நடைபெற்றது. கிளையின் சார்பாக நிர்வாகிகள், மகளிரணியினர், உறுப்பினர்கள் கமிட்டியுடன் இணைந்து சேவைகள் செய்தனர்


கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோவில் கிளை

06-04-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ ராம நவமி மகோத்ஸவம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விசுவாவசு பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உபதலைவர் ஸ்ரீ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் ஸ்ரீ.வேங்கடகணபதி, பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மகளிரணி செயலாளர், ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.விக்னேஷ் மற்றும் ஸ்ரீ.சிவராஜன், ஸ்ரீ.ராஜகோபால் ஸ்ரீமதி.லக்ஷ்மி ஸ்ரீமதி.புவனேஸ்வரி, ஸ்ரீ.ராமசீலா, ஸ்ரீ.அத்வைத், ஸ்ரீமதி.பாலாம்பாள், ஸ்ரீமதி.கண்ணாம்பாள், ஸ்ரீ.கேசவன், ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ.குருபிரசாத், கௌரவத் தலைவர் ஸ்ரீ.சங்கர், ஸ்ரீ.சங்கரன், ஸ்ரீ.பாஷ்யம் ஸ்ரீ.சிவராமன், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், ஸ்ரீமதி.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கௌரவத் தலைவர் ஸ்ரீ.ராஜசேகர் நன்றியுரையாற்றினார்.


கடலூர் மாவட்டம் - மஞ்சக்குப்பம் கிளை

23-03-2025 அன்று கிளையின் சார்பாக விசுவாவசு ஆண்டு பஞ்சாங்க படனம் மற்றும் பொதுக்குழு கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.திருமலை தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ஸ்ரீ.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ.சேதுமாதவன் (தலைமை ஆசிரியர் ஓய்வு) விசுவாவசு ஆண்டு பஞ்சாங்க பலன்கள் குறித்து விளக்கினார். பொதுக்குழு கூட்டத்தில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசு வழங்கவும், பெரிய கங்கணாங்குப்பம் பிரம்ம தீர்த்த அறக்கட்டளை கட்டிட பணிகள் விரைந்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ கோதண்டராமன், ஸ்ரீ.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. ஸ்ரீ.மோகனகண்ணன் நன்றி கூறினார்.


கடலூர் மாவட்டம் - கூத்தப்பாக்கம் கிளை

14-04-2025 அன்று கிளையின் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் துவங்கியது. விசுவாவசு ஆண்டு பஞ்சாங்க படனம் மற்றும் பலன்கள் ஸ்ரீ.நடராஜன் வாசித்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.ராஜாராமன் தலைமை தாங்கினார். கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியை கிளை உபதலைவர் ஸ்ரீ.பூ.சம்பத் ஐயங்கார் வாசித்தார். ஸ்ரீ.எஸ்.ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். 2024-2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கை கிளை பொருளாளர் ஸ்ரீ.கணேசன் சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் அளித்தனர். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பிரணதார்த்திஹரன் ஆண்டறிக்கை வாசித்தார். உறுப்பினர்கள் அனைவருக்கும் விசுவாவசு வருட பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிக்கவும், கோடை காலத்தில் தாகம் தீர்க்க கிளையின் சார்பாக நீர்மோர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.சங்கரன் ஸ்ரீ.லக்ஷ்மணன், ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.பாலகுரு, ஸ்ரீமதி.அலமேலு, ஸ்ரீமதி.ஜெயந்தி, ஸ்ரீ.சம்பத், ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ.சந்திரசேகரன், ஸ்ரீ.பக்தவத்சலம், ஸ்ரீ.ஸ்ரீவத்ஸன், ஸ்ரீ.ராமலிங்கம் ஸ்ரீமதி.வித்யா, ஸ்ரீமதி.சரஸ்வதி, ஸ்ரீ.ராஜசேகர், ஸ்ரீ.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.என்.வினோத் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS