மஞ்சக்குப்பம் கிளை
01-06-2025 கிளையின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.திருமலை தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பரகால இராமானுஜம் வரவேற்புரையாற்றினார், ஸ்ரீ.கோதண்டராமன் முன்னிலை வகித்தார். அரிமா மாவட்டத் தலைவர் வித்யா ஸ்ரீ ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரவிசந்திரன் பரிசுகளை வழங்கினார் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்டம் - கூத்தப்பாக்கம் கிளை
08-06-2025 அன்று கிளையின் கூட்டம் கிளை பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கிளை உறுப்பினர்களின் மாணவ, மாணவிகளை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில போஷகர் ஸ்ரீ.பூ.சம்பத் ஐயங்கார் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி ஆசி வழங்கினார். ஸ்ரீ.பாஸ்கரன், ஸ்ரீ.கண்ணன், ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீ.வெ.பிரணதார்த்திஹரன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கடலூர் மாவட்டம் - பண்ருட்டி கிளை
27-05-2025 கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கௌரவத் தலைவராக ஸ்ரீ.மூர்த்தி, கிளைத் தலைவராக ஸ்ரீ.சங்கர், உபதலைவராக ஸ்ரீ.சிவசுப்ரமணியன் பொதுச் செயலாளராக ஸ்ரீ.சண்முகராஜன், பொருளாளராக ஸ்ரீ.நவின்ராஜ், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.ஜெய்சங்கர், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.ரமாமோகன், ஆலோசகராக ஸ்ரீ.மோகன், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீ.கஸ்தூரிரங்க பட்டாச்சாரியார், ஸ்ரீ.அமிர்தகடேஸ சிவாச்சார்யர், ஸ்ரீ.சேகர், ஸ்ரீ.ராமு, ஸ்ரீ.மணிகண்டன், ஸ்ரீ.சிவக்குமார் ஸ்ரீ.முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
08-06-2025 அன்று கிளையின் சார்பாக சங்கரமடத்தில் 1008 சுவாசினி பூஜை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
|