ஆர்.எஸ்.புரம் கிளை/நகர கிளை
05-03-2025 அன்று காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டு கிளைகளும் இணைந்து பக்தர்களுக்கு நீர்மோர்/குளிர் பானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.எஸ்.ரமேஷ் துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலளார் ஸ்ரீ.ஒய்.ரமேஷ் ஆர்.எஸ்.புரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஜி.கணேசன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.நாகேஸ்வரன், பொருளாளர் ஸ்ரீ.கே.வி.சுப்ரமணியம், நகர கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.என்.ஹெச்.சுப்ரமணியன் மாநில போஷகர் ஸ்ரீ.ஆர்.பாலாஜி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம்
23-03-2025 அன்று மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.எஸ்.ரமேஷ் பதவியேற்பு விழா, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.கணேசன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ.சி.என்.கிருஷ்ணமூர்த்தி மேனேஜிங் பார்ட்னர் ஸ்ரீ.வத்ஸா டிரேடிங் கம்பெனி ப்ரிம், ஸ்ரீ.பி.பி.சுப்ரமணியம் பி.பி.அசோசியேட்ஸ் ஸ்ரீ.சி.ஆர்.கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீ கிருஷ்ணா லேமினேட்ஸ், டாக்டர்.விஷ்வநாத் அட்டாச்சி குரூப் ஆப் கம்பெனி, ஸ்ரீ.ஒய்.ரமேஷ் மாநில பொதுச் செயலாளர் தாம்ப்ராஸ், ஸ்ரீ.நடராஜன் வார்டு 67 அம்பாசிடர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உரையாற்றினர். மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஜி.பாலாஜி நன்றியுரையாற்றினார்.
|