பேட்டை கிளை
05-04-2026 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்பிரமணியன் வேத கோஷம் வாசித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் வரவேற்புரையாற்றினார். 2025-2026ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீ பராபவ வருஷ சித்திரை கனி மற்றும் அக்ஷய த்ருதியை முன்னிட்டு சிவன் கோவிலில் கிளையின் சார்பாக அன்னாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.நரசிம்மன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி, ஸ்ரீ.ஆர்.சுந்தரேசன், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றி கூறினார்.
|