திருநெல்வேலி மாவட்டம்
பேட்டை கிளை

06-04-2025 அன்று கிளையின் மாதாந்திர கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். 2024-2025ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. 14-04-2025 அன்று விசுவாவசு புத்தாண்டு மற்றும் 30-04-2025 அன்று அக்ஷய திருதியை முன்னிட்டு பேட்டை சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.ஆர்.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.பி.ராஜபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.


திருநெல்வேலி மாவட்டம் - மகாராஜ நகர் கிளை

30-03-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.பி.பி.சுந்தரேஷன் தலைமையில் நடைபெற்றது. தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் ஸ்ரீ.க.ஹரிஹரசுப்ரமணியன் பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுந்தர், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி.ரங்கபொன்னம்மாள், ஸ்ரீ.லக்ஷ்மிநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS