பேட்டை கிளை
07-06-2026 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியன் கடவுள் வாழ்த்து, வேத கோஷம் வாசித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் வரவேற்புரையாற்றினார். 17-06-2026 அன்று செங்கோட்டையில் நடைபெறும் வீரவாஞ்சிநாதன் நினைவு நாளில் கிளையின் சார்பாக அனைவரும் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி ஸ்ரீ.ஆர்.சுந்தர் கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.ஆர்.கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார். இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் ஏற்பாட்டினை செய்திருந்தார்.
|