பேட்டை கிளை
07-12-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். 16-11-2025 தாம்ப்ராஸ் எழுச்சி நாள் அன்று கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பாரதியாரின் பிறந்த நாளில் அவரது திருஉருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்திட மற்றும் 2026ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் கிளையின் சார்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.ஆர்.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றி தெரிவிக்க இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசித்தார்.
|