நாகை மாவட்டம்
மாப்படுகை கிளை

25-05-2025 அன்று கிளையின் நிர்வாகக்குழு/செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.எ.வி.ஆர்.சுரேஷ் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர் ஸ்ரீ.கே.சூர்யநாராயணன் முன்னிலை வகித்தார். மறைந்த மாநில மூத்த பொதுச் செயலாளர் மதுரை ஸ்ரீ.வி.ஜெகந்நாதன் மாநில ஆலோசகர் குணச்சித்திர நடிகர் ஸ்ரீ.டெல்லி கணேஷ், ஆனந்ததாண்டவபுரம் ஸ்ரீ.வேங்கடவரதன் ஆகியோரின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் தனது உரையில் கிளையின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்தல் மற்றும் 2025-2030ம் காலகட்டத்திற்கு மாவட்டத் தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடவாசல் ஸ்ரீ.ரமணன் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா ஸ்ரீ.என்.நாரயாணன் அவர்களுக்கும் கிளையின் சார்பாக பாராட்டுத் தெரிவித்து முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

08-06-2025 அன்று ஸ்ரீபிரஹந்நாயகி ஸமேத ஆபத்ஸகாயேஸ்வரர் ஸ்ரீ பூதேவி நீலாதேவி ஸமேத ஸ்ரீ கரிய மாணிக்க பெருமாள், சிதளாதேவி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காமாக்ஷி அம்மன், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ பீடாபயஹரி அம்மன் ஆகிய கோவில்களில் ஸம்வத்சர அபிஷேகம் பூஜைகள் மற்றும் ஹோமங்களை ஸ்ரீ.எம்.சோமஸ்கந்த சிவாச்சார்யார் மற்றும் ஸ்ரீ.சிவா சிவாச்சார்யார் நடத்தி வைத்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன் டிரஸ்டிகள் ஸ்ரீ.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீ.ஆர்.சுந்தர்ராஜன், ஸ்ரீ.எ.மீனாக்ஷிசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS