- கோபிசெட்டிபாளையம் கிளை
17-11-2025 முதல் 07-12-2025 வரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் கிளையின் சார்பாக கிருத்திகா மண்டல வேத பாராயணம் கிருஷ்ண யஜுர் வேத சம்பூர்ண வேத பாராயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்களை வரவேற்று நிறைவு நாளில் ஈரோடு மாவட்டத் தலைவர் ஆடிட்டர் கயிலை ஸ்ரீ.முரளிதரன் குடும்பத்தினர் சார்பாக 14 வேதாத்ரிகளுக்கு வஸ்திரம் மற்றும் சம்பாவனை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் தலைவர் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியை வரும் காலங்களில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். கோபி கிளை ஏற்பாடுகளை முன்னின்று நடத்த தீர்மானித்தனர்.
11-12-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.கே.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பவானி ஸ்ரீ.முரளி மாவட்டத் தலைவர் கயிலை ஸ்ரீ.முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நலத்திட்ட உதவி வழங்குதல், மாவட்ட மகளிரணி மாநாடு நடத்துவது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|