மெலட்டூர் கிளை
07-04-2026 அன்று கிளை புனரமைக்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.விஜயகுமார் ஐயர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கிருஷ்ணன் ஐயர் முன்னிலையில் 2026-30ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். கிளையின் தலைவராக ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஐயரும், பொதுச் செயலாளராக ஸ்ரீ மஹாலிங்கம் ஐயரும், பொருளாளராக ஸ்ரீ.சங்கரன் ஐயர், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.ஜகன்மோகனா சேதுராமன் ஐயரும் இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஐயரும் பொறுப்பேற்றனர். புதிய நிர்வாகிகளின் கடமைகள் சங்க செயல்பாடுகள் குறித்து மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் விரிவாக பேசினர். மேலும் கோவிந்தபுரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.மோகன் ஐயங்கார் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். விழா ஏற்பாட்டினை திருவையாறு கிளை பொருளாளர் ஸ்ரீ.சிவபாஸ்கர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் - கோவிந்தபுரம் கிளை
20-04-2026 அன்று வேத பாடசாலையில் வித்யார்த்திகளுக்கு அக்ஷ்ய த்ருதியை அன்று தாம்ப்ராஸ் ஃபவுண்டேஷன் சார்பில் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.வி.பி.ஹரன் ஐயர் ஒத்துழைப்புடன் ஸஹஸ்ர போஜனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தாம்ப்ராஸ் சார்பாக ஸ்ரீ போதேந்த்ராள் ஸ்ரீஸங்கர மடத்தில் கோஸாலையில் கோபூஜை நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருவையாறு ஸ்ரீ.கிருஷ்ணன் ஐயர், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.விஜயகுமார் ஐயர், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் ஐயர், கோவிந்தபுரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.மோகன் ஐயங்கார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் - சுவாமிமலை கிளை
18-04-2026 அன்று கிளை புனரமைப்புடன் 2026-2030ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சி மாநில துணைத் தலைவரும் தஞ்சாவூர் மாவட்டத் தலைவருமான ஸ்ரீ.விஜயகுமார் ஐயர் தலைமையிலும் சுவாமிமலை ஸ்ரீ.மணி(எ)நாகசுப்ரமணியன் ஐயர் முன்னிலையிலும் இறை வணக்கம், வேத கோஷம் சங்க உறுதிமொழியுடன் துவங்கியது. கிளையின் கௌரவ தலைவராக ஸ்ரீ.நாகராஜன் ஐயர், கிளைத் தலைவராக ஸ்ரீ.மணி(எ)நாகசுப்ரமணியன் ஐயர் துணைத் தலைவர்களாக ஸ்ரீ.பிச்சை ஸிவாச்சாரியார், மற்றும் ஸ்ரீ.கணேச ஸிவாச்சாரியார் பொதுச் செயலாளராக ஸ்ரீ.சுந்தரகணேசன் சிவாச்சாரியார், பொருளாளராக ஸ்ரீ.சுப்ரமணியன் ஐயர் ஆலோசகர்களாக ஸ்ரீ.கோட்டீஸ்வரன் சிவாச்சாரியார், ஸ்ரீ.அர்விந்த் ஸ்ரீ.கண்ணன் சிவாச்சாரியார், ஸ்ரீ.ராமசாமி ஐயங்கார், ஸ்ரீ.சதீஷ் சிவாச்சாரியார், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.விஜயலட்சுமி இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.கணேசன் ஐயர், இணைஞரணி இணைச் செயலாளராக ஸ்ரீ.ராம்பிரசாத் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
|