மயிலாடுதுறை மாவட்டம்
- குத்தாலம் கிளை

17-11-2025, 24-11-2025, 01-12-2025, 08-12-2025, 15-12-2025 ஆகிய நாட்களில் ஸ்ரீ அரும்பவனமுலையம்மை மற்றும் பல ஆலயங்களில் கார்த்திகை சோமவார விரதம் சங்காபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு லோக nக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் மேற்கொண்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் - சீர்காழி கிளை

07-12-2025 அன்று மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.ரமணன் தலைமையில் ஸ்ரீமான் நீலகண்ட பிரம்மச்சாரியின் 137வது பிறந்த நாள் விழா எருக்கூர் கிராமத்தில் நடைபெற்றது. நீலகண்ட பிரம்மச்சாரியின் பேரன் ஸ்ரீ.சுப்ரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமான் நீலகண்ட பிரம்மச்சாரியின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். மகாகவி பாரதியாரின் பேத்தி ஸ்ரீமதி. உமா பாரதி கலந்து கொண்டு பாரதியாரும், நீலகண்ட பிரம்மச்சாரியும் இணைந்து பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதை பற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கினர். தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீமதி.வைஜயந்தி ராஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

திருக்குறள் பண்பாட்டுப் பேரவைத் தலைவர் ஸ்ரீ.முத்துக் கருப்பன் பேசும் போது ஆன்மீகத்திற்கும், பாரத தேசத்திற்கும், தேச விடுதலைக்காக உழைத்தவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.ரமணன் சிறப்புரையாற்றி தீர்மானங்களை வாசித்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஸ்ரீ.ராமசிவசங்கர், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஸ்ரீ.சுவாமிநாதன் தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி.மஞ்சுளா, மாநில செயலாளர் ஸ்ரீ.முத்துக்குமார், ஸ்ரீ.சசிகோபாலன், டாக்டர் ஸ்ரீ.சத்யநாராயணன் ஸ்ரீ.முத்துகுருக்கள், ஸ்ரீ.நீலகண்ட பிரம்மச்சாரியின் வாரிசுகள் ஸ்ரீ.வைத்தீஸ்வரன், ஸ்ரீ.வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


மயிலாடுதுறை மாவட்டம் - குத்தாலம் கிளை

23-11-2025, 30-11-2025, 09-12-2025, 14-12-2025 ஆகிய நாட்களில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ அரும்பன்னவனமு லையம்மை சமேத ஸ்ரீ உத்தவேதீஸ்ர் ஸ்வாமி பஞ்சமூர்த்திகளுடன் காவிரி படிக்கறைக்கு எழுந்தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. குத்தாலம் சுற்றியுள்ள கோவில்களில் விசேட அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS