கொரட்டூர் கிளை
25-05-2025 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் மற்றும் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கிளையின் சார்பாக மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.நாராயணராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
01-06-2025 அன்று விவேகானந்தா பள்ளியில் +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியையிடம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் பொருளாளர் ஸ்ரீ.துர்காபிரசாத் ஆகியோர் கிளையின் சார்பாக ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கினர்.
17-06-2025 அன்று கிளையின் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி ஸ்ரீ.வாஞ்சிநாதன் நினைவு நாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் உபதலைவர் ஸ்ரீ.நாராயணராஜா, பொருளாளர் ஸ்ரீ.துர்கா பிரசாத் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தைலா சுவாமிநாதன், ஆலோசகர் ஸ்ரீ.சுப்பிரமணியம் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.மஹாலிங்கம் ஸ்ரீ.சேகர் பாபு, ஸ்ரீமதி.ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
|