சென்னை வடக்கு மாவட்டம்
அம்பத்தூர் கிளை

14-04-2025 அன்று பஞ்சாங்க படனத்தை சாமவேதி ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஸ்ரௌதிகள் சிறப்பாக நடத்தி வைத்தார். மாநில ஆலோசகர் ஸ்ரீ.ராமமூர்த்தி, மாநில உபதலைவர் ஸ்ரீ.சத்தியமூர்த்தி, கிளைத் தலைவர் ஸ்ரீ.லெக்ஷ்மி நாராயணன் பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி, பொருளாளர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.கிரிஜாரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் விசுவாவசு வருட பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. மௌனசாமி மட பொறுப்பாளர் உபதலைவர் ஸ்ரீ.மோகனகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


வட சென்னை மாவட்டம் - கொளத்தூர் கிளை

02-03-2025 அன்று கொளத்தூர் கிளையின் சார்பாக மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் தலைமையில், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தைலா ஸ்வாமிநாதன் ஏற்பாட்டில் சிறுவாபுரி முருகன் கோவில் ஸ்ரீபெரும்புதூர் குருவாயூரப்பன் கோவில் உள்ளிட்ட 8 திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்தோம். அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதரன், செயற்குழு உறுப்பினர்கள். ஸ்ரீ.மஹாலிங்கம், ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஸ்ரீமதி.வசந்தி, ஸ்ரீமதி.ஷயாமளா ஆகியோர் ஆன்மீக சுற்றுலாவிற்கு உறுதுணையாக இருந்தனர்.


வட சென்னை மாவட்டம் - கொரட்டூர் கிளை

30-03-2025 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கிளையின் சார்பாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், ஹயக்ரீவ ஹோமம் மற்றும் ஆன்மீக சுற்றுலா சிறப்பாக நடைபெற்றதை நிர்வாகிகள் பாராட்டினர். சங்க செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

06-04-2025 அன்று ஸ்ரீ ராமநவமி வழிபாடு கிளை மூத்த உறுப்பினர் ஸ்ரீ பாலசுப்ரமணியம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

14-04-2025 அன்று மக்கள் சேவைக்காக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.மஹாலிங்கம், ஸ்ரீ.சேகர்பாபு, ஸ்ரீமதி.சியாமளா ஆகியோர் கலந்து கொண்டு சேவை செய்தனர் வட சென்னை மாவட்டம்

23-03-2025 மாவட்டத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கிளைகளின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்று மாலையில் மாவட்டத் தலைவர் பதவிக்கு ஸ்ரீ.ஸ்வாமிநாதன் அவர்கங்ள போட்டியின்றி ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி ஸ்ரீ.ஒய்.சுப்பிரமணியம் அறிவித்தார். சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.இராமசாமி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சுமித்ரா சிவக்குமார் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ராஜேஷ், மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.நாராயணராஜா மற்றும் கிளைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்டத் தலைவர் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து சிறப்பாக செயல்பட கேட்டுக் கொண்டார். பின்னர் மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

30-03-2025 அன்று முகப்பேர் கிளையின் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 10-04-2025 அன்று மயிலாப்பூர் அறுபத்துமூவர் நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சார்பாக அன்னதானம் நடைபெற்றது. மாவட்டம் சார்பாக அன்னதானத்திற்காக நன்கொடை வழங்கப்பட்டது. மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.

13-04-2025 அன்று திருவொற்றியூர் கிளைத் தலைவர் பதவியேற்பு விழாவில் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளைத் தலைவர் ஸ்ரீ.மதுசூதனன் அவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


வட சென்னை மாவட்டம் - கொளத்தூர் கிளை

13-04-2025 அன்று செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வரவு செலவு கணக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கும் தாம்ப்ராஸ் மாத இதழ் கமிட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கிளையின் சார்பாக பொது மக்களுக்கு நீர் மோர் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 2025-2030ம் கால கட்டத்திற்கு மாநிலத் தலைவராக ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற பிரார்த்தனை செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.மூர்த்தி, உபதலைவர் ஸ்ரீ.அருணாச்சலம், ஸ்ரீ.ஸ்ரீதர், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஆதி, பொருளாளர் ஸ்ரீ.பிரகாஷ், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கிரிஷ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார் இணைச் செயலாளர் ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர், ஸ்ரீ.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்ட ஏற்பாட்டை மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி செய்திருந்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS