கொரட்டூர் கிளை
27-07-2025 அன்று கிளையின் சார்பாக குத்து விளக்கு பூஜை கிளையின் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தைலா ஸ்வாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்ரம் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ராமஸ்வாமி பெரம்பூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.சந்திரமௌலி, பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜெயகுமார், மாநில இணைச் செயலாளர் ஸ்ரீமதி.வித்யா ஸ்ரீனிவாசன், அம்பத்தூர் கிளை உறுப்பினர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளை மற்றும் மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.நாராயணராஜா குடும்பத்தினர் அன்னதான செலவை ஏற்றுக் கொண்டார்.
வட சென்னை மாவட்டம் - அம்பத்தூர் கிளை
15-08-2025 அன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளைத் தலைவர் ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன் தலைமையில் மகளிர்கள் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். மாநில ஆலோசகர் ஸ்ரீ.ராமமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். கிளைத் தலைவர் உறுப்பினர் சேர்க்கை தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது மற்றும் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.கிரிஜாரவி சுதந்திர தினத்தை போற்றி உரையாற்றினர். அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.சங்கர் ஸ்ரீ.சந்திரசேகர், ஸ்ரீ.ஸ்வாமிநாதன், பொருளாளர் ஸ்ரீ.சதீஷ், நிர்வாகிகள் மற்றம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.கே.கே.ஸ்ரீனிவாசன் நன்றி கூற தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
வட சென்னை மாவட்டம் - முகப்பேர் கிளை
09-08-2025 அன்று கிளையின் சார்பாக உபாகர்மா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு அனுஷ்ட்டித்தார்கள். நிகழ்சசிக்கு பின் தாம்ப்ராஸ் மாத இதழ் பற்றி அறிவித்தவுடன் பலர் தங்களை சந்தாதாரராக இணைத்துக் கொண்டார்.
|