திருவாரூர் மாவட்டம்

13-04-2025 அன்று மாவட்டத் தலைவர் பதவியேற்பு, மாவட்ட கிளை நிர்வாகிள் அறிமுகக் கூட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீ.எம்.கே. ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மறைந்த முன்னாள் மாநில மூத்த பொதுச் செயலாளர் மதுரை ஸ்ரீ.வி.ஜெகந்நாதன் மற்றும் மறைந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறவினர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ.கே.ராமநாதன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவரை போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ.எம்.கே.ஸ்ரீனிவாசனை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட திருநின்றிவூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.விருதகிரி, திருவள்ளூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.பாலசுப்ரமணியன், ஆவடி கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.கிருஷ்ணன், திருமுல்லைவாயில் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.உஷாபத்மநாபன், மீஞ்சூர் கிளை தலைவர் ஸ்ரீ.என்.சந்தானம், பருத்திப்பட்டு கிளைத் தலைவர் ஸ்ரீமதி.வித்யா ஜெகந்நாதன், பூவிருந்தவல்லி கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.கணபதி, அய்யப்பாக்கம் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதரன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். கிளைத் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றிய ஸ்ரீ.ஆர்.நரசிம்மன், ஸ்ரீ.டி.ராதா, ஸ்ரீ.சாமாராவ், ஸ்ரீ.என்.எ.வி.நாராயணன் ஸ்ரீ.ஆர்.சுந்தரராஜன் ஸ்ரீ.வி.ஜி.கே.ராஜகோபால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மாநிலத் தலைவர் திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் பொன்னடை அணிவித்து கௌரவித்தார்.

மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எம்.கே.ஸ்ரீனிவாசன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய கிளைகள் துவக்குதல், புதிய உறுப்பினர் சேர்க்கை தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளராக நியமிக்கப்ட்ட ஸ்ரீ.கே.ராமநாதன், மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ.பி.ஆர்.ரமணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ.பி.குஹராஜன், மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ.டி.ராதா ஆகியோரை வாழ்த்தினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலப் பொருளாளர் பருத்திப்பட்டு ஸ்ரீ.ஆர்.நரசிம்மன், மாநில மூத்த துணைத் தலைவர் ஸ்ரீ.பி.பாலசுப்ரமணியன் சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன் மாநில துணைத் தலைவர் (அரசியல் பிரிவு) ஸ்ரீ.கே.லக்ஷ்மிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவர்களுக்கு மாவட்டத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எம்.கே.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்தும் திருநின்றவூர் கிளையின் பெயர் பலகையை மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். மாநிலத் தலைவருக்கு பொன்னாடை மலர் கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி மாவட்டத் தலைவர் கௌரவித்தார். கிளை நிர்வாகிகள் அறிமுகத்திற்கு பின் ஸ்வஸ்தி வாசகம், தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ராமநாதன், திருநின்றவூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.விருத்தகிரி மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எம்.பரமேஸ்வரன் உபதலைவர் ஸ்ரீ.ஆர்.பார்த்திபன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ஆர்.விஜயலக்ஷ்மி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.விஜயசாரதி, பூந்தமல்லி கிளையின் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.பி.சந்தோஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் - திருநின்றவூர்

13-04-2025 அன்று மாவட்டத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கிளையின் சார்பாக நிர்வாககிள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட நிர்வாகக்குழுவில் கிளையிலிருந்து 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எம்.கே.ஸ்ரீனிவாசன், சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன், மாநில பொருளாளர் பருத்திப்பட்டு ஸ்ரீ.ஆர்.நரசிம்மன் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ராமநாதன் ஆகியோருக்கு கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

14-04-2025 அன்று திருமுல்லை வாயில் கிளை சார்பாக பஞ்சாங்க படனம் ஸ்ரீமான் கவுசிக்கணபாடிகள் பூஜைகளை நடத்தி வைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீமதி.உஷா பத்மநாபன், உபதலைவர் ஸ்ரீ.சுந்தர்ராஜன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீமதி.ஜெயந்தி பிச்சை, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி சுந்தர்ராஜன், பொருளாளர் ஸ்ரீ.குஹராஜன், ஆலோசகர் ஸ்ரீ.பாலாஜி இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஸ்வரன், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்தார்.


திருவள்ளூர் மாவட்டம் - பருத்திப்பட்டு கிளை

08-03-2025 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம், ஸ்ரீ ராம பஜன் நிகழ்த்தப்பட்டது. 19-04-2025 அன்று சௌ.ஸ்ரேயாவின் குட்டி இராமாயண, பாகவத கதைகள் சொற்பொழிவு குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் பதவியேற்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS