சென்னை தென் மாவட்டம்
மடிப்பாக்கம் கிளை

22-03-2026 அன்று கிளையின் மறு சீரமைப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார் தலைமையில் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஐயர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கிளையின் 2026-2030ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவராக ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஐயர் பொதுச் செயலாளராக வரகூர் ஸ்ரீ.ரமணன் சாஸ்திரிகள் பொருளாளராக ஸ்ரீ.சாம்பமூர்த்தி ஐயர் இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.மணிகண்டன் ஐயர் மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.மாலதி சுரேஷ் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய நிர்வாகிகளின் கடமைகள் அதற்காக மாவட்ட, மாநில அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து தென் சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார் மற்றும் செங்கை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் ஐயர் சிறப்புரையாற்றினர். தங்களது சங்க அனுபவங்களையும் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் மாநில ஆலோசகர் ஸ்ரீ.குருராஜன் ராவ் மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் ஐயர், நங்கநல்லூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத் ஐயங்கார், மயிலை கிளைத் தலைவர் ஸ்ரீ.ரமேஷ் பாஷ்யம் ஐயங்கார், கீழ்க்கட்டனை கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஐயங்கார், சித்தாலப்பாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.கேசவ பட்டாச்சாரியார், செங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.பாலாஜி ஐயங்கார், நங்கநல்லூர் கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதர் ஐயர் மற்றும் பலர் உரையாற்றினர். கூட்ட ஏற்பாட்டினை செங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கார்த்திக் பாபு ஐயர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் ஐயர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


தென் சென்னை மாவட்டம் - நங்கநல்லூர் கிளை

05-04-2026 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.அனிருத் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. 28-06-2026 அன்று கிளையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மஹா சுதர்ஸன ஹோமம், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்க தீர்மானிக்கப்பட்டது. தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரர்களை அதிகரிப்பது மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அறக்கட்டளை துவக்க தீர்மானிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி, பொருளாளர் ஸ்ரீ.ரவி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.அஷ்வின் பாலாஜி மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சூர்யாஸ்ரீ பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதர், ஆலோசகர் ஸ்ரீ.குருராஜன், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி நன்றி தெரிவிக்க ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

14-03-2026 அன்று ஸ்ரீமதி.திரிபுரசுந்தரி புதல்வியின் திருமணத்திற்கு உதவி கேட்டுக் கொண்டதன் பேரில் திருமாங்கல்யம், கூரைபுடவை, பட்டு வேஷ்டி மற்றும் உதவித்தொகையை கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத் சுரேஷ், ஆலோசகர் ஸ்ரீ.கே.குருராஜன் ஆகியோர் அவர்களது இல்லத்திற்கு சென்று வழங்கினர். மேற்படி குடும்பத்தினர் தாம்ப்ராஸ் அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS