அண்ணாநகர் கிளை
06-04-2025 கிளையின் முப்பெரும் விழா தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீ ராமர் நாம சங்கீர்த்தனத்தை குமாரி மிருதுளா குழுவினர் நடத்தி வைத்தனர். குமாரி மிருதுளா அவரது சாதனைகள் பற்றி மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி கூறினார். ஸ்ரீ.சாய்கணேஷ், கிளை ஆலோசகர், ஸ்ரீ.ஸ்ரீதர் வேதபாராயணம் சொன்னார்கள். கிளையின் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் துவங்கியது.
கொளத்தூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணன், மாம்பலம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாய்ராம், திருவொற்றியூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.மதுசூதனன், பெரம்பூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.சந்திரமௌலி, கே.கே.நகர் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சுதாரமணி, முகப்பேர் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், அசோக் நகர் கிளை மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.உமா சுந்தரேசன், வடசென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ.ராமநாதன், சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஸ்ரீமதி.சுந்தரி ரெங்கநாதன் விசுவாவசு பஞ்சாங்கம் வெளியிட மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ், கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அண்ணாநகர் கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாம்ப்ராஸில் உறுப்பினராகாதவர்கள் தங்களை இணைத்து கொண்டனர். பல கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இணைச் செயலாளர் ஸ்ரீ.சங்கரநாராயணன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.குப்புசாமி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மி விஸ்வநாதம், ஆலோசகர் ஸ்ரீ. ஸ்ரீதரன் ஆகியோர் செய்தனர். மாநில செயலாளர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நன்றியுரை, ஸ்வஸ்தி வாசகம், தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|