கொளத்தூர் கிளை
04-04-2026 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ பராபவ வருட பஞ்சாங்க படனம் மற்றும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி, பொருளாளர் ஸ்ரீ.பிரகாஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீ.இ.எஸ்.மூர்த்தி, ஸ்ரீ.அருணாச்சல சாஸ்திரிகள், ஸ்ரீ.ஸ்ரீதர் பட்டாச்சாரியார், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.சடகோபன் மற்றும் ஸ்ரீ.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மத்திய சென்னை மாவட்டம் - விருகம்பாக்கம் கிளை
14-04-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா பொதுச் செயலாளர் டாக்டர் கே.வி.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜெயகோபால் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்கத்தை தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் வெளியிட ஆலோசகர் ஸ்ரீ.எஸ்.கோபாலன் பெற்றுக் கொண்டார். ஆன்மீக செம்மல் மாம்பலம் ஸ்ரீ.ரமேஷ் சதாசிவன் அவர்கள் பஞ்சாங்க படனம் நடத்தி வைத்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற ஸ்ரீ.அவிக்ஷீட் விஜய், ஸ்ரீ.விஸ்வநாத் ஊஹ இண்டர்மீடியேட் தேர்வில் அகில இந்திய அளவில் தரவரிசையில் 48வது இடம் பெற்ற கே.ஆர்.ஸ்ரீவத்ஸன், பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற சாய்கிருபா ஆகியோர்களை பாராட்டி கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை மாநிலத் தலைவர் வழங்கி எழுச்சியுரையாற்றினார். பொருளாளர் ஸ்ரீ.ஹெச். ஸ்ரீனிவாசன் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். நன்கொடையாளர்கள் ஸ்ரீ.எஸ்.ஜி.நடராஜன், ஸ்ரீ.எஸ்.நாகராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மறைந்த முன்னாள் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.நாகராஜன் மற்றும் மறைந்த முன்னாள் பொருளாளர் ஸ்ரீ.கே.கே.வேதபுரி பெயரில் தலா ரூ.10000/- மேலும் ஸ்ரீ.ஹெச்.ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் பெயரில் ரூ.20,000/-, ஸ்ரீமதி.லதா ஸ்ரீனிவாசன் பெயரில் ரூ.10,000/- கல்வி நிதி உதவி அளிப்பதென்று அறிவித்தனர். நிகழ்ச்சியை ஸ்ரீமதி.லக்ஷ்மி ரமேஷ் தொகுத்து வழங்கினார். உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளையின் சார்பாக பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயலெக்ஷ்மி நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீ.சங்கரமூர்த்தி, ஸ்ரீமதி.காயத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.வி.ராமநாதன் நன்றியுரையாற்றினார்.
|