செங்கோட்டை

17-06-2026 அன்று மாநில அமைப்பின் சார்பிலும், இதர மாவட்ட கிளை அமைப்பின் சார்பிலும் சுதந்திர போராட்ட வீரர், ஸ்ரீ.வீரவாஞ்சிநாத ஐயர் நினைவு நாளை முன்னிட்டு நமது தாம்ப்ராஸ் அமைப்பின் கொடியினை ஏந்தி, வீர முழக்கத்துடன் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குமரி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீகணேஷ் பந்துலு நெல்லை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சிவக்குமார் விருதுநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீவாரி முத்துபட்டர், மதுரை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம் தென்காசி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.அய்யாமணி மாநில செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், நெல்லை மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி பேட்டை கிளைத் தலைவர் ஸ்ரீ.பரமேஸ்வரன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.சேஷாத்ரி, தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கண்ணன் ஸ்ரீ வில்லிபுத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சாத்தூர், மதுரை, கடையநல்லூர், விருதுநகர் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ.இராமச்சந்திரன் ஸ்ரீவாரி முத்து பட்டர், ஸ்ரீ.நீலகண்டன் சாஸ்திரி ஆகியோர் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS