நமஸ்காரம்/ஆசீர்வாதம்.
சமீப காலமாக தமிழக பிராமண சமூக இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொண்டிட பெண்கள் கிடைப்பது பல்வேறு காரணங்களால் மிகவும் அரிதாகிவிட்டது. இதனால் பல பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலில் அவதியுற்று வருகின்றனர்.
பெற்றோர்களின் அறிவுரைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புகின்ற பிராமண சமூக இளைஞர்களின் திருமண வாழ்க்கை தற்போது பெரும் கேள்விக்குறியாக ஆகி இருப்பது வேதனை அளித்திட்டாலும், நாம் மனம் தளராமல் இவ்விஷயத்தினை தக்க பல பரிமாணங்களில் கையாண்டிட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
The above is a big challenge. There is no point in lamenting or living with hopelessness. As a Service Organisation, Thambraas has been looking at the Solution Matrix for this vexatious challenge.
தீர்வுக்கான முயற்சிகளில் கீழே குறிப்பிட்டுள்ளபடி நமது சங்கமும், சமூகமும் கடந்த பல வருடங்களாக எடுத்து வந்துள்ள நடவடிக்கைகள் வருமாறு:
1. தமிழ் ஸ்மார்த்த பிராமணர்கள் வடமாள், வாத்திமாள், பிரஹசரணம், அஷ்டசஹஸ்ரம், சோழியாள் மற்றும் முக்காணியர் போன்ற பிரிவுகளுடன் மனமுவந்து ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்வது.
2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் வடகலை, தென்கலை, சோழியாள் மற்றும் கரவழியாள் என்கின்ற வித்தியாசம் பார்க்காமல் தங்களுடைய உட்பிரிவுகளில் திருமணம் செய்து கொள்வது.
3. தெலுங்கு பிராமண சமூகத்தினர் அவர்களுக்குள் இருக்கக்கூடிய பல்வேறு உட்பிரிவுகளில் திருமணம் செய்து கொள்வது.
4. மாத்வ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களது உட்பிரிவுகளை பிரித்துப் பார்க்காமலும் மேலும் கன்னடம் மற்றும் மராட்டி மொழியினை தாய் மொழியாக கொண்ட மாத்வர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது.
5. பிராமண சமூக இளைஞனும் இளைஞியும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களேயானால், அவர்களுடைய எந்த உட்பிரிவுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது.
6. பிராமண சமூகத்தை சார்ந்த மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரிவினர்களும் (ஐயர், ஐயங்கார், தெலுங்கு பிராமணர், மாத்வா) ஒருவருக்கொருவர் வித்தியாசம் பார்க்காமல் மனமுவந்து திருமணம் செய்து கொள்வது.
7. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் இதர மாநிலங்களில் வாழ்கின்ற பிராமண சமூக வரன்களையும், வதூக்களையும் ஊக்குவிப்பது.
மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை பல வருடங்களாக பிராமணர் சமூகத்தினர் தாங்களே நேரிடையாகவோ அல்லது திருமண ஏற்பாடு நிறுவனங்கள் வழியாகவோ அல்லது தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வழியாகவோ கடைப்பிடித்தும் மற்றும் தற்போது தொடர்ந்து வந்தாலும், இன்றைய நிலைப்பாடு என்பது தமிழக பிராமண இளைஞர்களின் திருமணம் ஓர் மிகப்பெரும் சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது தான்.
திருமண விஷயத்தில் நாம் கடந்த காலங்களில் பிள்ளை வீட்டார்களையும் தற்போது பெண் வீட்டார்களையும் குறை சொல்லுவது என்பது சகஜமாகி விட்டது. இந்தப் போக்கு கைவிடப் பட வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் மரியாதையும், நல்லெண்ணமும், ஒற்றுமையும் உருவாகிடும்.
அத்வைத, விசிஷ்டாத்வைத மற்றும் த்வைத ஆச்சார்ய மகனியர்களுடைய அறிவுரைகளை கேட்டு நமது பல்நிலை நிர்வாகிகள் தெரிவித்த ஒரு மித்த கருத்துக்களின் அடிப்படையில் நாம் தற்போது
Perpetuation of National Rishi Parampara
பாரத தேசிய அளவில் ரிஷி பரம்பரை என்கின்ற நமது அற்புதமான பாரம்பரியம் தொடர்ந்திட வேண்டும் என்கின்ற மிக உயர்ந்த சிந்தனையிலும் மற்றும் தொலைநோக்கு பார்வையுடனும் பிற மாநில பெண்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்வது என்கின்ற அடிப்படையில் தற்போது வட இந்திய மாநிலத்தை சார்ந்த (உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் etc.,) மற்றும் மேற்கு இந்திய மாநிலத்தை சார்ந்த (மஹாராஷ்டிரா, குஜராத் etc) போன்ற மாநிலங்களிலிந்து, நமது தமிழக பிராமண இளைஞர்களுக்கு பெண்கள் கிடைப்பதற்கு சிறப்பு முயற்சியினை துவங்கி உள்ளோம்.
இந்த சீரிய வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில், வியாபார நோக்கத்தோடு நடைபெறுகின்ற மேட்ரிமோனி நிறுவனங்கள் போல் அல்லாமல், நாம் நமது அகில இந்திய பிராமண சம்மேளனத்தின் (AIBF) ஒத்துழைப்பினை பெற்றுக் கொண்டும் மேலும் நமது ஹிந்தி பேசக்கூடிய மூத்த நிர்வாகிகளை நேரடியாக மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்யச் செய்து, அங்குள்ள பிராமண பெற்றோர்களை அணுக துவங்கி விட்டோம்.
இந்த முயற்சியில் நமக்கு பொருளாதார லாப நோக்கம் கிடையாது என்பதனை தெள்ளத் தெளிவாக்கிட விரும்புகின்றேன். இருப்பினும் நமது மூத்த நிர்வாகிகள் சுற்றுப் பயண செலவுகளை ஏற்றுக் கொள்வதற்காக, இந்த சிறப்பு திருமண முயற்சியில் பங்கு கொள்ள விரும்புகின்ற பையன்களின் பெற்றோர்களிடம் இருந்து டீநே கூiஅந ஞயலஅநவே (ஒரே ஒரு முறை) ஆக ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வாங்குவது என்பது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.
(நமது ஹிந்தி பேசும் மூத்த நிர்வாகிகளின் பயண செலவுகளாக விமான பயணம், ரயில் பயணம் மற்றும் கார் பயணம் ஆகியவை தேவைக்கேற்ப செலவழித்திட நேர்ந்திடுகிறது).
பல வட இந்திய மாநிலங்களில் பிராமணப் பெண்களின் பெற்றோர்கள், வறுமை கோட்டிற்கு கீழேயும் (BPL) ஏழைகளாகவும் (Poor) மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களாகவும் (Lower Middle Class) உள்ளனர் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வரதட்சணை எதிர்பார்ப்பு என்பது பல பெண்களுடைய திருமண வாழ்விற்கு தடையாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள குடும்பங்களை சார்ந்த பெண்களின் திருமண செலவிற்கும் நம்மிடம் இருந்து நிதி உதவி எதிர்பார்க்கின்ற நிலையும் உள்ளது. அவர்களுடைய எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் அத்தகைய பெண்களின் திருமண ஏற்பாட்டிற்கு உதவிட ஸ்பான்சர்ஸ் (நன்கொடையாளர்கள்) தேவைப்படுகின்றது. இதற்கும் நாம் ஓர் உறுதியான ஏற்பாட்டினை செய்துள்ளோம் என்கின்ற நற்செய்தியினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த ஏற்பாட்டில் மற்றொரு முக்கியமான அம்சமாக, வட இந்திய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களைச் சார்ந்த பிராமண பெற்றோர்கள் தங்களது பெண்களின் பாதுகாப்பிற்கும் சந்தோஷமான வாழ்க்கை சூழலுக்கும், தாம்ப்ராஸ் பேரியக்கம் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று எதிர்நோக்குகின்றனர். நாமும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து அதனை கொள்கை ரீதியாக உறுதியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம். அந்த பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது என்பதனை நிச்சயம் யாவரும் ஒப்புக் கொள்வோம்.
நம்மில் இருக்கின்ற ஒரு சிலர் அவர்களின் தாய்மொழியான ஹிந்தி மொழி என்பது திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளிடையே பரஸ்பர தொடர்பில் தடையாக இருந்திடுமோ என்கின்ற சந்தேகம் கொள்வது தேவையற்றது. ஏனெனில் ஒருவருக்கொருவர் குடும்ப வாழ்க்கையில் பழகுகின்ற பொழுது அத்தியாவசியமான அவரவர் மொழிச் சொற்களை, அந்த பெண்களும் கற்றுக் கொள்வார்கள்; நமது பையன்களும் கற்றுக் கொண்டிடுவார்கள். இந்த விஷயத்தினை ஓர் தடையாக (Deal Breaker) நினைப்பது முற்றிலும் தகர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
ரிஷி பரம்பரையாக ஓர் அற்புதமான பாரம்பரியத்தை நமக்கு பகவான் அளித்திருக்கின்றார். இந்த ரிஷி பாரம்பரியம் என்பது சனாதன தர்மத்தின் அடித்தளமாகும். எனவே அகில இந்திய அளவில் நாம் அனைவரும் ஒற்றுமையோடு ரிஷி பாரம்பரியத்தினை பாதுகாத்திட வேண்டும், தொடர்ந்திட வேண்டும் மற்றும் வாழையடி வாழையாக தழைத்தோங்கிட நமது உரிய பங்கினை ஆற்றிட வேண்டும். இந்த திட்டம் அதற்கான ஓர் பெரும் நல்வாய்ப்பினை உருவாக்கி கிடைத்தற்கரிய வரப்பிரசாதமாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.
தற்போது நமது சங்கத்தின் நூற்றுக்கணக்கான கிளைகளின் நிர்வாகிகளும், மாவட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும், மாநில நிர்வாகிகளும் மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் வாசகர்களும் இந்த சிறப்பு திருமண ஏற்பாட்டு முயற்சியினை, நமது சமூகத்தினர் பெருமளவில் பயன்படுத்திட அவர்களை ஊக்குவித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)