அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே
 

நமஸ்காரம்/ஆசீர்வாதம்.

சமீபத்தில் ஒரு தினசரி பத்திரிகையில் ஓர் தகவல் வெளி வந்ததனை நாம் கண்டோம். அதன் சாராம்சம் வருமாறு:

“திமுகவில் பிராமணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு; அதாவது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பிராமண வேட்பாளர்கள் களத்தில் இருக்கலாம்“

இது செய்தி அல்ல. கேள்விப்பட்டதாக அல்லது அறிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்த பதிப்பு தான் இது.

ஏன் திடீரென்று திமுகவிற்கு பிராமணர்கள் பற்றிய சிந்தனை. பிராமணர்கள் என்ன தமிழகத்தில் பெரிய வாக்கு வங்கியா? பின்பு எதனால் இந்த சிந்தனை ?

பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளில் கடமையாற்றி வருவது யாவரும் அறிந்ததே.

நாம் நம்முடைய பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற கருத்து யாதெனில் பிராமண சமூகத்தினுடைய ஆதரவினை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அல்லது ஓர் யுக்தியாகவோ பெற்றுக் கொள்ளாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது; ஆட்சியும் நடத்த முடியாது என்பது தான்.

நம்முடைய இந்த கருத்து ஆணவத்தில் சொல்லப்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. Dynamics of Political Parties, Dynamics of Politial Leaders and Dynamics of Bureaucrats will always have to reckon the pivotal role of the Brahmin Community in various spheres, including Media

கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், திமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சார்பில் பாஜக எதிர்ப்பு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு மற்றும் சனாதனத்திற்கு எதிர்ப்பு என்பது அடிக்கடி பேசப்பட்டு, எழுதப்பட்டு வந்ததனை நாம் நன்கு அறிவோம்.

பாஜகவினர் ஒரு புறம் திமுகவினை ஹிந்து விரோதி என்று அடையாளம் காட்டி வருகின்றனர். ஹிந்துக்களில் சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஓர் முக்கியமான இடத்தில் இருக்கின்ற பிராமண சமூகத்தினரிடம் அக்கறை காட்டலாம் அல்லது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம் என்கின்ற நிலைப்பாடு, ஹிந்து விரோதி என்கின்ற தங்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மழுங்கச் செய்திட உதவிடும் என்று திமுகவின் வியூக அமைப்பாளர்கள் நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, அரசியல் கட்சிகள் அவர்களுடைய வியூகங்களை வகுத்துக் கொள்ளட்டும், அணிகளை அமைத்துக் கொள்ளட்டும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட சாம, பேத, தான, தண்ட என்கின்ற 4 வகை முயற்சிகளை எடுத்து மோதிக் கொள்ளட்டும். இத்தருணத்தில் தமிழக பிராமண சமூகத்தினர் முன் இருக்கின்ற பெரிய கேள்வி நாம் எவ்வாறு நமது பிராமண வாக்கு வங்கியினை மேலும் பலப்படுத்தி 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதன் தாக்கத்தினை உருவாக்கிடப் போகிறோம் என்பது தான்.

நம்முடைய சங்கத்தின் வீச்சினை (Range) மேலும் துரிதமாக அதிகப்படுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத் தலைநகர்கள், தாலூக்கா தலைநகர்கள் மற்றும் ஒன்றியங்கள் மேலும் சில பல இடங்களில் (ஊராட்சி பகுதிகளில்) நமது சங்கத்தின் செயல்பாடுகளையும் சேவைகளையும் எடுத்துச் சென்று பிராமணர்களுடைய ஒற்றுமையினை மேலும் பலமிக்கதாக ஆக்கி அதன் தாக்கத்தினை சட்டப்பேரவை தேர்தலில் பிரதிபலிக்கச் செய்திட வேண்டும். அதாவது பிராமண சமூகத்தினர் அனைத்து தொகுதிகளிலும் 100 விழுக்காடு (100%) வாக்குப் பதிவு செய்திட வேண்டும்.

பாரத தாய் நாட்டிற்கும், தாய் தமிழிற்கும், நமது மாநிலத்திற்கும் அனைத்து காலகட்டங்களிலும் அருந்தொண்டாற்றி வருகின்ற நாம் நமது ஒற்றுமையினையும், அர்த்தமுள்ள வலிமையினையும் உறுதிப்படுத்திட வேண்டிய காலகட்டமிது. தாம்ப்ராஸ் பேரியக்கத்தின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் வாசகர்கள் ஆகியோருக்கும் என்னுடைய அன்பு வேண்டுகோள் யாதெனில், நாம் நமது சங்கத்தின் வீச்சினை (Range) மேலும் Deep Rooted ஆக்கிட நாம் அனைவரும் உணர்வுபூர்வமாக பாடுபட்டிட வேண்டும் என்பது தான்.

சாத்திரம் படைத்த பிராமணர்கள் ஆகிய நாம் சரித்திரமும் படைத்தவர்கள். தமிழக அரசியல் சரித்திரத்தில் மீண்டும் ஓர் பெரும் பங்கினை நமக்கென உருவாக்கி நமது நீண்ட நாள் கோரிக்கைகளான:

அ) முற்பட்டோரில் நலிந்தோருக்கான நல வாரியம் (கேரள மாநிலத்தில் உள்ளது போல்) ஆ) 10% EWS இட ஒதுக்கீட்டினை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திட பாடுபடு அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

நன்றி !

இங்ஙனம்

உங்கள் அன்பு சகோதரன்

திருவொற்றியூர்

என்.நாராயணன்

மாநிலத் தலைவர்

E-mail : ungalnarayanan@gmail.com

Thambraas State Head Quarters

Whatsapp Numbers : 81480 11172 /

81480 11106 (10.00 am to 6.00 pm)




Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS