நமஸ்காரம்/ஆசீர்வாதம்.
( A )
தமிழக அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படையில் மதிப்பெண்களை மேலும் 5ரூ குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
BC, MBC, & SC/ST ஆகிய பிரிவினருக்கு மட்டும் தான் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் குறைப்பு என்பது பொதுப் பிரிவினருக்கு (பிராமணர்கள் உட்பட்ட ஒரு சில சமூகங்களுக்கு) மட்டும் கிடையாது.
மொத்த மதிப்பெண்ணான 150ல் கீழே குறிப்பிட்டுள்ளபடி தேர்ச்சி விகிதம் இருந்திடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது :
|
தேர்ச்சி மதிப்பெண்கள் |
பழையது | புதியது |
|
1. FC (பொதுப் பிரிவினர்) 60% | 90/150 | 90/150 |
|
2. BC MBC பிரிவினருக்கு 50% | 82.5/150 | 75/150 |
|
3. SC/ST பிரிவினருக்கு 40% | 82.5/150 | 60/150 |
ஏற்கனவே தமிழகத்தினுடைய பொதுவான கல்வித் தரமும், ஆசிரியர்களின் தரமும் தேவையான அளவில் இல்லை என்கின்ற மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தகுதிக்கான மதிப்பெண்களை மேலும் 5% குறைப்பது என்பது மாணவ, மாணவிகளின் நலனுக்கு எதிரானது.
அதோடு மட்டுமில்லாமல் பொதுப் பிரிவினரில் முற்பட்ட
சமூகத்தினருக்கு மட்டும் பெரும் அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றது.
ஸஏற்கனவே தமிழகத்தில் உள்ள Creamy Layer அம்சம் இல்லாத 69% இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுபவர்கள் யாவரெனில், அந்தந்த தொகுப்புகளை (BC/MBC) சார்ந்த Creamy Layer குடும்பங்கள் மட்டுமே. அதாவது அந்தந்த சமூகங்களை சார்ந்த பல தலைமுறை ஏற்கனவே படித்த குடும்பங்களை சார்ந்தவர்களும், பணக்காரர்களும் இதில் அடங்குவர்.
மிகவும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த பல தலைமுறைகள் பயனாளிகள், அவர்கள் கல்வி ரீதியாக முற்பட்டவர்களாக தேறி இருந்தாலும், அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இது உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பிற்கு எதிரானது.
இவ்விஷயத்தில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் ஒரே
கொள்கையினை கடைப்பிடிக்கின்றன. இந்த கொள்கை நமக்கெல்லாம் தொடர்ந்து பெரும் ஏமாற்றத்தினையும், மன உளைச்சலையும் மற்றும் அநீதியையும் தொடர்ந்து இழைக்கின்ற விஷயமாகும்].
இன்னொரு பரிமாணத்தினை நான் இங்கே பதிவு செய்திட வேண்டும். அதாவது TET தேர்வு என்பது ஆசிரியர்களின் தகுதிக்கான தேர்வாகும். இந்த TET தேர்வில் தேர்விற்கான மதிப்பெண்களை மேலும் 5% குறைப்பது என்பது ஆசிரியர்களின் தரத்தில் மேன்மேலும் பாதிப்பினை உருவாக்கிடும். இது போன்ற முடிவினால் பாதிக்கப்படுபவர்கள் அரசு பள்ளி மாணவ மாணவிகளும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளும் மட்டும் தான்.
ஏற்கனவே தமிழகத்தில் தனியார் CBSE பள்ளிகள், ICSE பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா (CBSE) பள்ளிகள், சைனிக் (CBSE) பள்ளிகள் பெரும் எண்ணிக்கையில் துவங்கப்படுவதும், தமிழக மக்கள் இந்த பள்ளிகளை நோக்கி கடந்த காலங்களை விட தற்போது மிகப்பெரும் எண்ணிக்கையில் பயணிப்பதும், தமிழக அரசின் தரமற்ற கல்விக் கொள்கையினை மேலும் பறை சாற்றுகின்ற வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்திற்கு தற்போதைய TET தேர்வு அநீதி போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்திடுமா என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக அரசு இந்த முடிவினை மறு பரிசீலனை செய்து திரும்பப் பெற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
( B )
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள UGC (University Grants Commission) சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான Equity Regulations என்கின்ற அரசாணையினை சமத்துவம், சமவாய்ப்பு மற்றும் பாகுபாடு இல்லாமை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக என்கின்ற அடிப்படையில் UGC Equity Regulations (உயர் கல்வியில் சமத்துவ விதிமுறைகள்)என்கின்ற புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தினை, முற்றும் தவறான அடிப்படையில் புரிந்து கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள புதிய விதிமுறைகளை UGC (University Grants Commission) அறிவித்துள்ளது.
இதன்படி ஏற்கனவே இருந்த SC/ST பிரிவினர்களுக்கான ஜாதி பாகுபாடு புகார்கள் என்று இருந்ததனை மேலும் விஸ்தரித்து இந்த பட்டியலில் OBCகளையும் சேர்த்துள்ளது.
இதில் விடுபட்டவர்கள் பொதுப் பிரிவினர் (General Category) மாணவ மாணவிகள் தான். பொதுப் பிரிவில் (General Category) பிராமண சமூகம் உள்ளிட்ட இதர சில சமூகங்களும் அடங்கிடும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் OBC என்கின்ற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சில மாநிலங்களில் சிறுபான்மையின சமூகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகளினால் பொதுப் பிரிவில் (General Category) இருக்கக்கூடிய மாணவ மாணவியர் மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிடும் அபாயம் உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இந்த விதிமுறைகளை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. உதாரணமாக “காதல்” போன்ற முன்னெடுப்புகளை ஆட்சேபிக்கின்றவர்களுக்கு எதிராக பொய்யான புகார் கொடுத்து பொதுப் பிரிவினரை பழி வாங்கிட முடியும்.
பாகுபாடு செய்வதற்கான முகாந்திரமாக ஜாதி, மதம், பாலினம், பொருளாதார பின்தங்கிய நிலை மற்றும் பிராந்தியம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விதிமுறைகளில் பொய்ப் புகார்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஒரு ஷரத்தும் இல்லை. இதனால் பொதுப் பிரிவினர் மிகப்பெரும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்திட வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிருப்தியினை உருவாக்கி எதிர்ப்பு அலைகளை ஆர்ப்பாட்டங்களாக நடைபெறச் செய்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே பல்வேறு மாவட்டங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாவட்ட மேஜிஸ்டிரேட் இந்த விதிமுறைகளை எதிர்த்து தமது பதவியினையே ராஜினாமா செய்துள்ளார்.
இந்த மடல் எழுதப்படுகின்ற தருணத்தில், உச்ச நீதிமன்றம் இந்த UGCன் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால உத்தரவு வழங்கி முந்தைய சட்டத்தினையே கடைப்பிடித்திட வற்புறுத்தி உள்ளது. இது பொதுப் பிரிவினருக்கு ஓர் இடைக்கால நிவாரணமாக அமைந்திடும்.
மத்திய அரசு இந்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
நமது எதிர்ப்பினை எழுத்து வழியாகவும், மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கும் அனுப்பி வைத்திட இருக்கின்றோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றேன்..
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)